பாதுகாப்பு படையினரிடம் தன்னிச்சையாக சரணடைந்த நக்சலைட்!
Nov 6, 2025, 09:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பாதுகாப்பு படையினரிடம் தன்னிச்சையாக சரணடைந்த நக்சலைட்!

அரசின் பொது பாதுகாப்பு நடவடிக்கைக்கு கிடைத்த மாபெரும் வெற்றி!

Web Desk by Web Desk
Nov 6, 2025, 07:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட 3 மாநில போலீசாரால் தேடப்பட்டு வரும் பிரபல நக்சலைட்டான சுனிதா ஓயம், தனது ஆயுதங்களை ஒப்படைத்து பாதுகாப்பு படையினரிடம் சரணடைந்துள்ளார்.

ஏறக்குறைய 5 அடி உயரம் கொண்ட 23 வயது பெண்மணியான சுனிதா ஓயம் மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் மகாராஷ்டிர மாநில போலீசாரால் தேடப்பட்டு வரும் ஒரு பிரபல நக்சலைட் ஆவார். மாலாஜ்காண்ட் – தர்ரேகாசா தளத்தின் AREA COMMITTEE உறுப்பினராகச் செயல்பட்டு வந்த இவரது தலைக்கு 3 மாநில போலீசாரும் 14 லட்சம் ரூபாய் வெகுமதி அறிவித்திருந்தனர்.

இந்நிலையில், நவீன ரக INSAS துப்பாக்கியைக் கையில் ஏந்தியவாறு நேரடியாகப் பாலாகட் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த சுனிதா ஓயம், அங்கிருந்த பாதுகாப்பு படையினர் முன்னிலையில் சரணடைந்தார். சுமார் 3 ஆண்டுகளுக்கும் மேலாக நக்சல் அமைப்பில் செயல்பட்டு வந்த சுனிதா, தனது குடும்பத்தினருடனான தொடர்பை இழந்ததையடுத்து பாதுகாப்பு படையினரிடம் தன்னிச்சையாகச் சரணடைந்ததாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 ஆண்டுகளுக்கு முன்னர் சுனிதா ஓயமை நக்சல் இயக்கத்தினர் கடத்திச் சென்றதாக அவரது குடும்பத்தார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் காலகட்டத்தில் நக்சல் இயக்கத்தினரால் மூளைச்சலவை செய்யப்பட்ட சுனிதா, நக்சல் குழுவின் பாதுகாப்பு படையில் இணைந்து AREA COMMITTEE உறுப்பினர் பொறுப்பிற்கு உயர்ந்திருந்தார். கடந்த அக்டோபர் 31-ம் தேதி சரணடைய முடிவெடுத்த சுனிதா ஓயம், தனது துப்பாக்கி மற்றும் உடைமைகளுடன், HAWK FORCE-ன் முகாமை அடைந்தார்.

அப்போது அவரது துப்பாக்கி, 3 மேகசின்கள், 30 குண்டுகள் மற்றும் ஒரு UBGL ஷெல் ஆகியவற்றை பாதுகாப்பு படையினரிடம் அவர் ஒப்படைத்தார். இந்நிலையில், சரணடைந்த சுனிதாவுக்கு உதவித்தொகையாக 20 லட்சமும், வீட்டு உதவிக்காக ஒன்றரை லட்சமும், திருமண உதவிக்காக 50 ஆயிரமும், கல்வி உதவிக்காக ஒன்றரை லட்சமும் வழங்க மத்தியப்பிரதேச மாநில அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர் செயல்பாட்டில் இருந்த நக்சலைட் ஒருவர் பாதுகாப்பு படையினரிடம் தன்னிச்சையாகச் சரணடைவது, கடந்த 33 ஆண்டுகளில் இதுவே முதல் முறை எனத் துறை சார்ந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனைப் பொது பாதுகாப்பு நடவடிக்கையின் வெற்றியாகக் கருதும் மாநில அரசு, பிற நக்சல் உறுப்பினர்களையும் ஆயுத போராட்டத்தைக் கைவிட்டு விரைந்து சரணடைய அறிவுறுத்தியுள்ளது.

Tags: மத்தியப்பிரதேசம்Naxalite surrenders voluntarily to security forcesசரணடைந்த நக்சலைட்Naxalite surrenderபாதுகாப்பு படை
ShareTweetSendShare
Previous Post

கடன் வாங்கி திட்டங்களை செயல்படுத்துகிறது திமுக அரசு – நயினார் நாகேந்திரன்

Next Post

ரயில் டிக்கெட் எடுப்பது EASY : பயணிகளை நாடி வரும் M -UTS சகாயக் திட்டம்!

Related News

தொடரும் இந்தியாவின் அசத்தல் : செமிகண்டக்டர் உற்பத்தி சீனாவை முந்துகிறது!

உலகளாவிய உற்பத்தியில் வேகமான வளர்ச்சி – இந்தியாவை ஏற்றுமதி தளமாக மாற்றும் பன்னாட்டு நிறுவனங்கள்!

விண்வெளித்துறையில் தொடங்கும் புதிய அத்தியாயம் : அயராத முயற்சியால் ஆச்சரியப்படுத்தும் இந்தியா!

செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கும் மங்கள்யான்-2 : விண்வெளியில் உச்சம் மற்றொரு சாதனைக்கு தயாராகும் இந்தியா!

உலகை மிரட்டும் S-500 Prometey : இந்தியாவுடன் இணைந்து தயாரிக்க ரஷ்யா முடிவு!

டிரம்பின் வரிவிதிப்பு சட்டப்படி சரியானதா? : அமெரிக்க உச்சநீதிமன்றத்தின் கேள்வியால் வெடித்த சர்ச்சை!

Load More

அண்மைச் செய்திகள்

“பயனர்களின் உரிமையை பாதுகாக்க போராட்டம்” – AMAZON Vs PERPLEXITY மோதும் ஜாம்பவான்கள்!

ஒன்று கூடிய பாக். பயங்கரவாதிகள் : இந்தியா மீது மீண்டும் தாக்குதல் நடத்த சதித்திட்டம்!

ட்ரம்ப் வரி விதிப்பால் உயர்ந்த விலைவாசி – திணறும் அமெரிக்கர்கள்!

“பூர்வி” கூட்டு ராணுவ பயிற்சி நடத்தும் முப்படைகள் – சீன எல்லையில் வலிமையை வெளிப்படுத்தும் இந்தியா!

ரயில் டிக்கெட் எடுப்பது EASY : பயணிகளை நாடி வரும் M -UTS சகாயக் திட்டம்!

பாதுகாப்பு படையினரிடம் தன்னிச்சையாக சரணடைந்த நக்சலைட்!

கடன் வாங்கி திட்டங்களை செயல்படுத்துகிறது திமுக அரசு – நயினார் நாகேந்திரன்

மேலூரில் கண்மாயின் வடிகாலை மர்ம நபர்கள் உடைத்ததால் கழிவு நீருடன் வெளியேறிய தண்ணீர்!

ஆந்திர அரசுப் பேருந்தில் தீ விபத்து!

கொள்ளிடம் ஆற்றில் கொட்டப்படும் குப்பைகள் – சுகாதார சீர்கேடு நிலவுவதாக பொதுமக்கள் புகார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies