டிரம்பின் கருத்தால் சர்ச்சை - ரகசியமாக அணு ஆயுத சோதனைகளை நடத்தி வரும் பாக்.,?
Nov 7, 2025, 12:15 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

டிரம்பின் கருத்தால் சர்ச்சை – ரகசியமாக அணு ஆயுத சோதனைகளை நடத்தி வரும் பாக்.,?

Web Desk by Web Desk
Nov 7, 2025, 09:05 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாகிஸ்தான் ரகசியமாக அணு ஆயுத சோதனைகளை நடத்துவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியது, தெற்காசியாவின் அணு ஆயுத அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சற்று விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தி தொகுப்பில்.

பயங்கரவாதத்தின் ஊற்றாகத் திகழ்ந்து வரும் பாகிஸ்தான் மீது அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அதிர்ச்சியூட்டும் குற்றச்சாட்டை முன்வைத்த நிலையில், பாகிஸ்தானின் அணு ஆயுத திட்டம் தொடர்பான மர்மங்கள் மீண்டும் தலைதூக்க தொடங்கியுள்ளன. இது தொடர்பாக அண்மையில் பேசியிருந்த அதிபர் டிரம்ப், ரஷ்யா, சீனா, வட கொரியா ஆகிய நாடுகளுடன் பாகிஸ்தானும் ரகசியமாக நிலத்துக்கு அடியில் அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருவதாகக் கூறியிருந்தார்.

இது தெற்காசியாவின் பாதுகாப்பு சமநிலையில் புதிய விவாதத்தைக் கிளப்பியது. அவரது கூற்று பாகிஸ்தானின் பிராந்திய அரசியல் நுணுக்கங்களையும், அந்நாட்டின் அணு ஆயுத கட்டுப்பாட்டைச் சுற்றிய சந்தேகங்களையும் மீண்டும் வெளிச்சத்திற்கு கொண்டுவந்தன. ஆனால், டிரம்பின் குற்றச்சாட்டை அடியோடு மறுத்த பாகிஸ்தான், அவரது கூற்று அடிப்படை ஆதாரமற்ற கருத்து என விமர்சித்தது.

மேலும், கடந்த 1998-ம் ஆண்டு முதல் தங்கள் நாடு தன்னார்வத்துடன் அணு ஆயுத சோதனை தடைக்கு இணங்கிச் செயல்பட்டு வருவதாகவும் அந்நாட்டு அரசு விளக்கியிருந்தது. ரச்கோ மலைப்பகுதி மற்றும் கரான் பாலைவனத்தில் கடந்த 1998-ம் ஆண்டு நடத்தப்பட்ட, 6 வெடிப்புகள் அடங்கிய அணு ஆயுத சோதனையையே பாகிஸ்தான் இதுவரை உறுதிபடுத்தியுள்ளது.

ஆனால், கடந்த ஏப்ரல் 30 முதல் மே 12-ம் தேதி வரையிலான காலகட்டத்தில், ஆஃப்கானிஸ்தான் – பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் ஏற்பட்ட இரு நிலநடுக்கங்கள், அதிபர் டிரம்பின் குற்றச்சாட்டுக்குத் தீனி போட்டன. அப்போது அது இயற்கையாகவே நில அதிர்வுகள் அதிகமாக நிகழும் பகுதி என்பதை விவரித்த புவியியல் நிபுணர்கள், டிரம்பின் குற்றச்சாட்டை மறுத்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.

இது ஒருபுறமிருக்க மற்றொருபுறம் உலகளாவிய கண்காணிப்பு முறைமைகள் எந்தவொரு அணு வெடிப்பு குறியீட்டையும் பதிவு செய்யாதது டிரம்பின் கூற்றைப் பொய்யாக்கியது. அதே நேரத்தில், உயர் திறன் கொண்ட கண்காணிப்பு அமைப்புகள் உள்ள இந்தக் காலகட்டத்தில், இது போன்ற சோதனைகளை மறைமுகமாக நடத்துவது சாத்தியமற்றது எனத் துறை சார்ந்த வல்லுநர்களும் தெளிவாக விளக்கினர்.

இருப்பினும், அதிபர் டிரம்பின் முந்தைய குற்றச்சாட்டு, பாகிஸ்தானின் அணு ஆயுத கட்டுப்பாடு யாரிடம் உள்ளது என்ற கேள்வியை எழுப்பி அதனை விவாதப் பொருளாகவும் மாற்றியது. அதற்குத் தனது தேசிய கட்டளை ஆணையம் மூலம் விளக்கமளித்த பாகிஸ்தான் அரசு, முழுமையான அணு ஆயுத கட்டுப்பாடும் ராணுவத்தின் கீழ் உள்ளதாகத் தெரிவித்திருந்தது. இது தொடர்பாக அண்மையில் வாய்திறந்த முன்னாள் CIA அதிகாரி ஜான் கிறியாகூ, முன்னாள் அதிபரான பர்வேஸ் முஷாரஃப் காலத்தில் பாகிஸ்தானின் அணு ஆயுதங்களை அமெரிக்காவே கட்டுப்படுத்தியதாகத் தெரிவித்துள்ளது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

இதனை இஸ்லாமாபாத் மறுத்துள்ளபோதிலும், இதில் அமெரிக்காவின் பங்கு எந்த அளவிற்கு உள்ளது என்பது இதுவரை தெளிவாகவில்லை. பல ஆண்டுகளாகப் பாகிஸ்தானின் அணு ஆயுத ஆபத்துகள்குறித்து அமெரிக்கா கவலை கொண்டுள்ளது அனைவரும் அறிந்ததே. தேவைப்பட்டால் பாகிஸ்தானின் அணு ஆயுதங்களைக் கைப்பற்றவும் அமெரிக்கா ரகசிய திட்டம் வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. கடந்த 2011-ம் ஆண்டு NBC NEWS என்ற தனியார் ஊடகம் வெளியிட்ட செய்திகளும் இந்தத் தகவல்கள் உண்மை என்பதை அடிக்கோடிட்டு காட்டின.

இதனிடையே அமெரிக்க பாதுகாப்பு நுண்ணறிவு அமைப்பு வெளியிட்ட 2025-ம் ஆண்டுக்கான உலகளாவிய அச்சுறுத்தல் அறிக்கையில், பாகிஸ்தான் தனது அணு ஆயுதங்களை நவீனப்படுத்தி, குறைந்த சக்திகொண்ட தற்காலிக போராட்ட அணு குண்டுகளை உருவாக்கியுள்ளதாக எச்சரிக்கப்பட்டிருந்தது.

இந்தக் கூற்று இந்தியாவிற்கு, பெரிய அபாயத்தை உருவாக்கக்கூடியதாக மதிப்பிடப்பட்டுள்ளது. மொத்தத்தில் இவையனைத்தையும் ஒருங்கிணைத்துப் பார்க்கும்போது அடிப்படை ஆதாரங்கள் இல்லையென்றாலும், டிரம்பின் கூற்று பாகிஸ்தானின் அணு ஆயுத திட்டம் எத்தனை மறைமுகமாகவும், வெளிநாட்டு செல்வாக்குடனும் செயல்படுகிறது என்ற கேள்வியை முன்னிறுத்தியுள்ளது.

Tags: pakistanDonald TrumpControversy over Trump's comments - Is Pakistan secretly conducting nuclear weapons tests?
ShareTweetSendShare
Previous Post

தொடரும் இந்தியாவின் அசத்தல் : செமிகண்டக்டர் உற்பத்தி சீனாவை முந்துகிறது!

Next Post

ஆட்சிக்கு வந்தவுடன் ஆனைமலை நல்லாறு திட்டம் நிறைவேற்றப்படும் – நயினார் நாகேந்திரன்

Related News

தொடரும் இந்தியாவின் அசத்தல் : செமிகண்டக்டர் உற்பத்தி சீனாவை முந்துகிறது!

உலகளாவிய உற்பத்தியில் வேகமான வளர்ச்சி – இந்தியாவை ஏற்றுமதி தளமாக மாற்றும் பன்னாட்டு நிறுவனங்கள்!

விண்வெளித்துறையில் தொடங்கும் புதிய அத்தியாயம் : அயராத முயற்சியால் ஆச்சரியப்படுத்தும் இந்தியா!

செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கும் மங்கள்யான்-2 : விண்வெளியில் உச்சம் மற்றொரு சாதனைக்கு தயாராகும் இந்தியா!

உலகை மிரட்டும் S-500 Prometey : இந்தியாவுடன் இணைந்து தயாரிக்க ரஷ்யா முடிவு!

டிரம்பின் வரிவிதிப்பு சட்டப்படி சரியானதா? : அமெரிக்க உச்சநீதிமன்றத்தின் கேள்வியால் வெடித்த சர்ச்சை!

Load More

அண்மைச் செய்திகள்

சபரிமலை பெருவழிப் பாதை வரும் 17-ம் தேதி திறப்பு – வனத்துறை அறிவிப்பு!

இன்றைய தங்கம் விலை!

கோவையில் இளம்பெண் காரில் கடத்தல்? – சிசிடிவி காட்சியால் பரபரப்பு!

அஜித்குமார் மரணம் தொடர்பான ஆய்வக முடிவு – 3 வாரத்தில் சிபிஐக்கு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

வந்தே மாதரம் பாடல் ஒவ்வொரு இல்லங்களிலும், நமது உள்ளங்களில் ஒலிக்கட்டும் – எல்.முருகன்

வந்தே மாதரம் 150-வது ஆண்டு கொண்டாட்டம் – அனைவரும் பங்கேற்குமாறு ஆர்எஸ்எஸ் அழைப்பு!

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க தமிழக அரசு தவறிவிட்டது – பாஜக மாநில மகளிரணி தலைவர் கவிதா ஸ்ரீகாந்த்

வாயால் வடைசுட்டு பெண்களைக் கயமைக் கழுகுகளிடம் பலிகொடுக்கும் அறிவாலய அரசு – நயினார் நாகேந்திரன்

செங்கோட்டையன் ஆதரவாளர்கள் 12 பேர் அதிமுகவில் இருந்து நீக்கம் – இபிஎஸ் நடவடிக்கை!

ஆட்சிக்கு வந்தவுடன் ஆனைமலை நல்லாறு திட்டம் நிறைவேற்றப்படும் – நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies