நடிகர் ரஜினிகாந்தின் 173வது படத்தைச் சுந்தர்.சி இயக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம் கூலி திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் நல்ல வசூலை குவித்தது.
தற்போது, ஜெயிலர் 2 திரைப்படத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் நிலையில், ரஜினிகாந்தின் அடுத்த படத்தைப் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரஜினிகாந்தின் 173வது படத்தை சுந்தர்.சி இயக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேசனல் தயாரிக்கிறது என்றும், இந்தப் படம் 2027ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
















