மருதமலை வனப்பகுதியில் 184 அடி உயர முருகன் சிலை அமைப்பது தொடர்பாக முழு விவரங்களுடன் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், சிலை அமைய உள்ள இடத்தில் பார்க்கிங் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்த விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்யும் வரை முருகன் சிலை அமைக்கும் பணிகளை தொடங்க வேண்டாம் என அறிவுறுத்திய நீதிபதிகள், வழக்கு விசாரணையை டிசம்பர் 5ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
















