மத்தியப் பிரதேசத்தில் பள்ளியில் மாணவர்களுக்குச் செய்தித்தாள்களில் உணவுகள் பரிமாறப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள நடுநிலை பள்ளியில் அரசின் மதிய உணவுத திட்டத்தில் மாணவர்களுக்குச் செய்திதாள்களில் உணவுகள் பரிமாறப்பட்டது.
மாணவர்களுக்குச் சுகாதாரமற்ற முறையில் வழங்கப்பட்ட அந்த உணவுகளை மாணவர்கள் உண்ணும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகிக் கடும் கண்டனத்திற்கு உள்ளாகி உள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர், உடனடி விசாரணைக்கு உத்தரவிட்டார். விசாரணையில் சம்பவம் உறுதி செய்யப்பட்டதை அடுத்து சத்துணவு பொறுப்பாளர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
















