இந்திய வீரர் அபிஷேக் சர்மா சர்வதேச டி20யில் குறைவான பந்துகளில் 1,000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்தியா பேட்டிங் செய்ய, 5.4 ஓவர்களில் மின்னல் குறுக்கிட்டு ஆட்டம் நிறுத்தப்பட்டது.
இப்போட்டியில் அபிஷேக் சர்மா 13 பந்துகளில் 23 ரன்கள் எடுத்துள்ளார். இதன்மூலம் குறைவான பந்துகளில் 1,000 ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார்.
சர்வதேச டி20 போட்டிகளில் 528 பந்துகளில் அபிஷேக் சர்மா ஆயிரம் ரன்களை கடந்துள்ளார். இன்னிங்ஸ் கணக்கின்படி விராட் கோலி, அபிஷேக் சர்மாவுக்கு முன்பாக அதிவேகமாக 1,000 ரன்களை கடந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
















