தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் - வறட்சியின் பிடியில் டெஹ்ரான்!
Mar 15, 2026, 01:58 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் – வறட்சியின் பிடியில் டெஹ்ரான்!

Murugesan M by Murugesan M
Nov 8, 2025, 08:33 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஈரானில் 22 மாகாணங்களில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. குடிநீர் வழங்கும் முக்கிய அணைகள் வறண்டதால் மக்களின் தாகத்தை தீர்க்க முடியாமல், அரசு தடுமாறி வருகிறது.

கடுமையான வறட்சி… சுட்டெரிக்கும் வெப்பம்… 50 டிகிரி செல்சியஸை தாண்டிப் பதிவான வெயில் என அனைத்தையும் தாங்கிக் கொண்டு பரிதவித்து வருகின்றனர் ஈரான் மக்கள்.. கடும் தண்ணீர் பற்றாக்குறை, மின்சார பற்றாக்குறை போன்ற காரணங்களால் 22 மாகாணங்களில் அரசு அலுவலகங்களுக்கு அவ்வப்போது விடுமுறையையும் அளிக்கப்பட்டு வருகிறது. இதற்குத் தலைநகர் டெஹ்ரானும் விதிவிலக்கல்ல… அங்கு முன்னெப்போதும் இல்லாத கடுமையான வறட்சி நிலவுகிறது.

தொடர்ச்சியாக 6வது ஆண்டாக வறட்சி நிலவும் நிலையில், சில அணைகளில் 10 சதவிகிதத்திற்கும் குறைவான கொள்ளளவே தண்ணீர் உள்ளன. டெஹ்ரானின் கிழக்கில் உள்ள 5 முக்கிய நீர்த்தேக்கங்களில் ஒன்றான லத்யன் அணையில் 9 சதவிகிதம் மட்டுமே நீர் இருப்பு உள்ளது. இதனால் நிலைமை மோசமாக உள்ளதாக ஈரான் அரசு கூறியுள்ளது.. டெஹ்ரானின் அணைகள் 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைந்த மட்டத்திற்குச் சென்றுள்ளதாக அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

நவம்பர் மாத இறுதிக்குள் மழை பெய்யவில்லை என்றால் டெஹ்ரானில் இருந்து மக்கள் வெளியேற வேண்டியிருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். சுமார் ஒரு கோடி பேர் வசிக்கும் டெஹ்ரான், நீர் மின்சாரத்தை பெரிதும் நம்பியுள்ளது. ஆனால் ஆறுகள் மற்றும் ஈரநிலங்கள் வறண்டுவிட்டதால், மின் உற்பத்தி சரிந்துள்ளது.

சில மின் நிலையங்கள் குளிர்விக்கும் நீர் இல்லாததால் ஆஃப்லைனில் உள்ளன. ஈரானின் எரிசக்தி அமைப்பு, நீர் மின்சாரம் மற்றும் புதைபடிவ எரிபொருட்களை அதிகம் சார்ந்துள்ளது, அதே நேரத்தில் சூரிய சக்தி மற்றும் காற்றாலை ஆகியவை மொத்த திறனில் ஒரு சிறிய பகுதியாகவே உள்ளன. தடைகள், முதலீட்டாளர்களின் சந்தேகம் மற்றும் பல தசாப்தங்களாக முதலீடு குறைவாக இருப்பது ஆகியவை பல்வகைப்படுத்தல் முயற்சிகளை முடக்கியுள்ளன.

ஈரானின் நன்னீரில் சுமார் 80% விவசாயத்திற்கு இன்னும் தேவைப்படுகிறது, திறனற்ற நீர்ப்பாசனம், ஈரானின் தண்ணீர் பற்றாக்குறைக்கு காரணமாகப் பார்க்கப்படும் நிலையில், நீர்ப்பாசன திட்டங்களை மேம்படுத்தினால் மட்டுமே, தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க முடியும் என்கின்றனர் நீர்வளத்துறை நிபுணர்கள்.

Tags: Widespread water shortage - Tehran in the grip of droughtதலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம்வறட்சியின் பிடியில் டெஹ்ரான்
ShareTweetSendShare
Previous Post

குண்டாக இருந்தால் இனி அமெரிக்க விசா கிடைக்காது? – ட்ரம்ப் புதிய உத்தரவு!

Next Post

விமானச் சேவையை முடக்கிய GPS SPOOFING – டெல்லியில் இதுதான் முதல்முறை!

Related News

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

இங்கிலாந்தில் பெண்ணை உருளைக்கிழங்கு என கிண்டல் செய்த நபருக்கு 29 லட்சம் ரூபாய் அபராதம்!

17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் சந்தையில் விடுவிக்க டிரம்ப் உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies