தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் - வறட்சியின் பிடியில் டெஹ்ரான்!
Jan 14, 2026, 05:07 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் – வறட்சியின் பிடியில் டெஹ்ரான்!

Murugesan M by Murugesan M
Nov 8, 2025, 08:33 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஈரானில் 22 மாகாணங்களில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. குடிநீர் வழங்கும் முக்கிய அணைகள் வறண்டதால் மக்களின் தாகத்தை தீர்க்க முடியாமல், அரசு தடுமாறி வருகிறது.

கடுமையான வறட்சி… சுட்டெரிக்கும் வெப்பம்… 50 டிகிரி செல்சியஸை தாண்டிப் பதிவான வெயில் என அனைத்தையும் தாங்கிக் கொண்டு பரிதவித்து வருகின்றனர் ஈரான் மக்கள்.. கடும் தண்ணீர் பற்றாக்குறை, மின்சார பற்றாக்குறை போன்ற காரணங்களால் 22 மாகாணங்களில் அரசு அலுவலகங்களுக்கு அவ்வப்போது விடுமுறையையும் அளிக்கப்பட்டு வருகிறது. இதற்குத் தலைநகர் டெஹ்ரானும் விதிவிலக்கல்ல… அங்கு முன்னெப்போதும் இல்லாத கடுமையான வறட்சி நிலவுகிறது.

தொடர்ச்சியாக 6வது ஆண்டாக வறட்சி நிலவும் நிலையில், சில அணைகளில் 10 சதவிகிதத்திற்கும் குறைவான கொள்ளளவே தண்ணீர் உள்ளன. டெஹ்ரானின் கிழக்கில் உள்ள 5 முக்கிய நீர்த்தேக்கங்களில் ஒன்றான லத்யன் அணையில் 9 சதவிகிதம் மட்டுமே நீர் இருப்பு உள்ளது. இதனால் நிலைமை மோசமாக உள்ளதாக ஈரான் அரசு கூறியுள்ளது.. டெஹ்ரானின் அணைகள் 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைந்த மட்டத்திற்குச் சென்றுள்ளதாக அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

நவம்பர் மாத இறுதிக்குள் மழை பெய்யவில்லை என்றால் டெஹ்ரானில் இருந்து மக்கள் வெளியேற வேண்டியிருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். சுமார் ஒரு கோடி பேர் வசிக்கும் டெஹ்ரான், நீர் மின்சாரத்தை பெரிதும் நம்பியுள்ளது. ஆனால் ஆறுகள் மற்றும் ஈரநிலங்கள் வறண்டுவிட்டதால், மின் உற்பத்தி சரிந்துள்ளது.

சில மின் நிலையங்கள் குளிர்விக்கும் நீர் இல்லாததால் ஆஃப்லைனில் உள்ளன. ஈரானின் எரிசக்தி அமைப்பு, நீர் மின்சாரம் மற்றும் புதைபடிவ எரிபொருட்களை அதிகம் சார்ந்துள்ளது, அதே நேரத்தில் சூரிய சக்தி மற்றும் காற்றாலை ஆகியவை மொத்த திறனில் ஒரு சிறிய பகுதியாகவே உள்ளன. தடைகள், முதலீட்டாளர்களின் சந்தேகம் மற்றும் பல தசாப்தங்களாக முதலீடு குறைவாக இருப்பது ஆகியவை பல்வகைப்படுத்தல் முயற்சிகளை முடக்கியுள்ளன.

ஈரானின் நன்னீரில் சுமார் 80% விவசாயத்திற்கு இன்னும் தேவைப்படுகிறது, திறனற்ற நீர்ப்பாசனம், ஈரானின் தண்ணீர் பற்றாக்குறைக்கு காரணமாகப் பார்க்கப்படும் நிலையில், நீர்ப்பாசன திட்டங்களை மேம்படுத்தினால் மட்டுமே, தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க முடியும் என்கின்றனர் நீர்வளத்துறை நிபுணர்கள்.

Tags: Widespread water shortage - Tehran in the grip of droughtதலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம்வறட்சியின் பிடியில் டெஹ்ரான்
ShareTweetSendShare
Previous Post

குண்டாக இருந்தால் இனி அமெரிக்க விசா கிடைக்காது? – ட்ரம்ப் புதிய உத்தரவு!

Next Post

விமானச் சேவையை முடக்கிய GPS SPOOFING – டெல்லியில் இதுதான் முதல்முறை!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

காளைகளை அனுமதிப்பதில் பாரபட்சமா? – ஜல்லிக்கட்டு ஏற்பாட்டாளர்கள் மீது குவியும் புகார்

உலக நலனுக்காக பிரிக்ஸ் நாடுகளின் திறனை ஒன்றிணைக்க இந்தியாவின் தலைமைத்துவம் முயற்சிக்கும்! – ஜெய்சங்கர்

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies