விசில்தான் எங்கள் மூச்சு! விசில்தான் எங்கள் பேச்சு : இந்தியாவில் இப்படியும் ஒரு கிராமமா?
Jan 13, 2026, 11:34 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

விசில்தான் எங்கள் மூச்சு! விசில்தான் எங்கள் பேச்சு : இந்தியாவில் இப்படியும் ஒரு கிராமமா?

Murugesan M by Murugesan M
Nov 10, 2025, 08:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விசில் அடித்து மற்றவரை அழைக்கும் விநோத கிராமத்தைப் பற்றிக் கேள்விபட்டிருக்கிறீர்களா? இந்தியாவின் வடகிழக்கு மாநிலத்தில் உள்ள அப்படியொரு வியத்தகு கிராமத்தைப் பற்றித் தற்போது பார்க்கலாம்..

விசில் தான் எங்கள் மூச்சு.. விசில் தான் எங்கள் பேச்சு… என மெல்லிய இசை ஒலித்துக் கொண்டே இருக்கும் இந்தக் கிராமம் இந்தியாவின் விநோதமான கிராமமாக அறியப்படுகிறது விசில் கிராமம். பசுமையான மேகாலயா மாநிலத்தின் காசி மலை மாவட்டத்தில் உள்ள காங்தாங் கிராமம்தான், இந்தச் சிறப்புக்குரியது.

யாரோ ஒருவர் உங்கள் பெயரைக் கேட்பதை கற்பனை செய்து பாருங்கள், நீங்கள் செய்வதெல்லாம் ஒரு மாயாஜால ஒலியை எழுப்புவதுதான். இது அற்புதமாக இருக்கிறது சரிதானே? மேகாலயாவின் காங்தாங் கிராமத்தில் 700 பேர் வாழும் நிலையில், ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட தனித்துவ விசில் சத்தம் பெயராகவே வைக்கப்படுவது வியப்பிலும் வியப்பாக உள்ளது.

அதாவது காங்தாங் கிராமத்தில் ஒரு குழந்தை பிறந்ததும், அதன் தாயார், தனது குழந்தைக்குச் சாதாரண பெயரோடு, பிரத்யேக டியூனையும் அதாவது விசில் போன்ற இசையையும் பெயராக வைத்துவிடுவாராம்.

அதில் ஒன்று ஷார்ட் சாங், மற்றொன்று லாங் சாங். இந்த ஷார்ட் சாங் வீட்டிலிருப்பவர்கள் அழைப்பதற்காக, லாங் சாங் ஊ பயன்பாட்டிற்காகவாம். இங்குச் சாதாரணமாக ஒருவரது பெயரைச் சொல்லி அழைப்பது என்பது அரிதிலும் அரிதாகவே பார்க்கப்படுகிறது.

பெரும்பாலும் கிராம மக்களுக்கு இடையேயான உரையாடலும் விசில் வடிவிலேயேதான இருக்குமாம்… இந்த விசித்திரமான பழக்கம், அவர்களுக்குள் உள்ள அன்பு, அடையாளம், பாரம்பரியம் போன்றவற்றோடு கலந்து, வாழையடி வாழையாக இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இவர்கள் இந்த இசை வடிவத்தினை, ‘ஜிங்கர்வை லாபெய்’அதாவது அம்மாவின் அன்பு பாடல் என்று அழைக்கிறார்கள்.

காங்தாங் கிராமவாசிகள் பறவைகள் மற்றும் விலங்குகளைப் போலவே தங்கள் செய்திகளைத் தங்கள் சக கிராம மக்களுக்குத் தெரிவிக்க விசில் அடிப்பதை ஒரு முறையாகப் பயன்படுத்துவதால் இது விசில் கிராமம் என்ற பெயரைப் பெற்று நிற்கிறது.. 700 குடியிருப்பாளர்களைக் கொண்ட இந்தக் கிராமம் 2022ம் ஆண்டிற்கான சிறந்த சுற்றுலா கிராம விருதை வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags: IndiavillageWhistling is our breath! Whistling is our speech: Is there a village like this in India?விசில்தான் எங்கள் மூச்சு! விசில்தான் எங்கள் பேச்சு
ShareTweetSendShare
Previous Post

களையிழந்த லாஸ் வேகாஸ் : காற்று வாங்கும் கேசினோ விடுதிகள்!

Next Post

எதிரி ஏவுகணைகள் நெருங்கவே முடியாது – “கோல்டன் டோம்” சோதனைக்கு அமெரிக்கா ரெடி!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies