கரூரில் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கில் சென்னையை சேர்ந்த மின்வாரியத் துறை அதிகாரிகள் இரண்டு பேரிடம் கரூரில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
கரூர் வேலுசாமிபுரத்தில் செப்டம்பர் 27-ஆம் தேதி விஜய் பங்கேற்ற தவெக பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
இச்சம்பவம் தொடர்பாகக் கடந்த மாதம் 17ம் தேதியிலிருந்து சிபிஐ அதிகாரிகள் கரூரில் விசாரணை நடத்தி வருகின்றனர். அதனடிப்படையில், வேலுசாமிபுரம் பகுதியில் உள்ள பொதுமக்கள், வியாபாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினருக்கு சம்மன் அனுப்பி விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில், கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தின் போது பாதிக்கப்பட்ட நபர்களை மீட்கும் பணிக்காக வருகை புரிந்த தனியார் ஆம்புலன்ஸ் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் 5 பேரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
இதையடுத்து இந்திய மின் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மத்திய பொதுத்துறை நிறுவனமான பவர் கிரீட்டை சேர்ந்த அதிகாரிகள் 2 பேரிடம் ஆஜரான நிலையில், சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
















