போதைப் பொருள் தடுப்பு வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் சென்னை அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகினார்.
போதை பொருள் வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இவ்வழக்கின் விசாரணையின்போது காவல்துறையினர் பல லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றதாகக் கூறப்படுகிறது.
இதனால் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடைபெற்றதாகக் கூறி இவ்வழக்கை அமலாக்கத்துறை கையிலெடுத்துள்ளது.
இது தொடர்பாக ஏற்கெனவே ஸ்ரீகாந்துக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பிய நிலையில் அவர் ஆஜராகவில்லை.
இந்தநிலையில் 2வது முறையாக விடுக்கப்பட்ட சம்மன்படி, சென்னை அமலாக்கத்துறையில் உள்ள அலுவலகத்தில் ஸ்ரீகாந்த் இன்று ஆஜராகி விளக்கம் அளித்தார்.
















