மத்திய சீனாவை திபெத்துடன் இணைக்கும் வகையில் கட்டப்பட்டிருந்த மிகப்பெரிய பாலம் ஒன்று, சில வினாடிகளில் இடிந்து தரைமட்டமான அதிர்ச்சிகர வீடியோ வைரலாகி உள்ளது.
சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் புதிதாகக் கட்டப்பட்ட ஹோங்கி பாலமானது, செவ்வாயன்று பாதி உடைந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
மத்திய சீனாவையும் திபெத்தையும் இணைக்கும் வகையில் 758 மீட்டர் நீளம் கொண்ட மேம்பாலம் அமைக்கப்பட்டிருந்தது.
மிகப்பெரிய மலைப் பகுதியை ஒட்டி, இந்தப் பாலம் அமைக்கப்பட்டிருந்ததும், அதற்கு மிக அருகே அணைக்கட்டு இருந்த நிலையில், அணைக்கட்டின் அழுத்தம் காரணமாகவே மேம்பாலம் இடிந்து விழுந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
பாலத்தின் டன் கணக்கான கான்கிரீட்கள் ஆற்றில் கலந்து, மாசு ஏற்பட்டது. மேம்பாலத்தின் ஒரு பகுதியில் விரிசல் ஏற்பட்டதைத் தொடர்ந்து திங்கள்கிழமை மேம்பாலம் மூடப்பட்டிருந்த நிலையில், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் மேம்பால வடிவமைப்பில் நடந்த குளறுபடியா அல்லது கட்டுமானத்தில் நடந்த சிக்கலா என்பது விசாரணை நடைபெற்று வருகிறது.
















