பீகார் சட்டப்பேரவை தேர்தல் முடிவு - என்டிஏ கூட்டணி தொடர்ந்து முன்னிலை!
Mar 15, 2026, 06:07 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பீகார் சட்டப்பேரவை தேர்தல் முடிவு – என்டிஏ கூட்டணி தொடர்ந்து முன்னிலை!

Murugesan M by Murugesan M
Nov 14, 2025, 04:11 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பீகார் சட்டப்பேரவை தேர்தலில் பெரும்பான்மைக்கு தேவையான இடத்திற்கு மேல் தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலையில் உள்ளதால் அக்கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கிறது.

பீகாரில் உள்ள 243 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த 6 மற்றும் 11ம் தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெற்றன. இந்தத் தேர்தல்களில் மொத்தம் 67 புள்ளி 13 சதவீத வாக்குகள் பதிவாகின. இதுதான் பீகாரில் அதிகபட்ச வாக்குப்பதிவு எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.

இந்தநிலையில் தேர்தலில் பதிவான வாக்குகள் 46 மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் காலை 8 மணிக்கு எண்ணும் பணி தொடங்கியது. இதில் தொடக்கம் முதலே பாஜக கூட்டணி முன்னிலை வகித்து வந்தது. தற்போதைய நிலவரப்படி, ஆட்சி அமைப்பதற்கு தேவையான இடங்களையும் தாண்டி 200-க்கும் மேற்படஇடங்களுக்கு மேல் தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலையில் உள்ளது.

அதில் பாஜக 95 இடங்களிலும் முதலமைச்சர் நிதிஷ்குமாரியின் ஐக்கிய ஜனதா தளம் 84 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. இந்தியா கூட்டணி வெறும் 32 இடங்களின் மட்டுமே முன்னிலையில் உள்ளது. அதில் ராஷ்டிரிய ஜனதா தளம் 25 இடங்களிலும் காங்கிரஸ் 1 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது..

இதனிடையே கருத்து கணிப்பில் கூறப்பட்ட இடத்திற்கு மேல் என்டிஏ கூட்டணி முன்னிலையில் உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி 130 முதல் 160 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் எனப் பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் கூறப்பட்டன.

ஆனால் எதிர்பார்த்ததைவிட தேசிய ஜனநாயக கூட்டணி 200 இடங்களுக்கு மேல் முன்னிலையில் உள்ளது. இதேபோல் மகாகத்பந்தன் கூட்டணி 73 முதல் 91 இடங்களில் வெற்றி பெறும் எனக் கூறப்பட்ட நிலையில், 29 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது.

அதேபோல, பீகார் சட்டப் பேரவை தேர்தலில் போட்டியிட்ட 101 தொகுதிகளில் 95 இடங்களில் பாஜக முன்னிலையில் உள்ளது. இதனால் அம்மாநிலத்தில் பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவாகி உள்ளது. கூட்டணி கட்சியான நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தள கட்சி 84 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

இதனிடையே தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலையில் உள்ளதை அடுத்து பாட்னாவில் உள்ள ஐக்கிய தன தள கட்சி தலைமை அலுவலகத்தில் அக்கட்சியினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். கட்சி கொடியை அசைத்தும், முதலமைச்சர் நிதிஷ்குமாரின் புகைப்படத்தை ஏந்தியும் அவர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கித் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இதேபோல் பீகாரில் பாஜக தனிப் பெரும் கட்சியாக உருவானதை அடுத்து தலைநகர் பாட்னாவில் அக்கட்சியின் தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். பிரதமர் மோடியின் உருவம் கொண்ட அலங்கரிக்கப்பட்ட தேரில் அவர்கள் ஊர்வலமாக சென்றனர். மேலும் பாஜக பெண் தொண்டர்கள் மேள, தாளங்கள் முழங்கியும் பாட்டு பாடியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags: Bihar Assembly Election Results - NDA Alliance Continues to Leadஎன்டிஏ கூட்டணிபீகார் சட்டப்பேரவை தேர்தல் முடிவுதேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலைbihar election 2025
ShareTweetSendShare
Previous Post

புல்லட் ரயில் நிலையத்தை நாளை பார்வையிடுகிறார் பிரதமர் மோடி!

Next Post

பீகாரில் மீண்டும் ஆட்சி அமைக்கிறது என்டிஏ கூட்டணி – பாஜகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

வாடகைக்கு விடப்பட்ட தொழிலதிபர் ரத்தன் டாடாவின் வீடு!

ஈரான் இஸ்ரேல் போரால் கடும் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வரும் கச்சா எண்ணெய் விலை!

தமிழகத்தில் தேசிய ஹோமியோபதி நிறுவனம் அமைக்க மாநில அரசு ஆர்வம் காட்டவில்லை – மத்திய அமைச்சர் பிரதாப் ராவ் ஜாதவ்

Load More

அண்மைச் செய்திகள்

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies