பீகார் சட்டப்பேரவை தேர்தல் முடிவு - என்டிஏ கூட்டணி தொடர்ந்து முன்னிலை!
Sep 14, 2026, 05:10 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பீகார் சட்டப்பேரவை தேர்தல் முடிவு – என்டிஏ கூட்டணி தொடர்ந்து முன்னிலை!

Murugesan M by Murugesan M
Nov 14, 2025, 04:11 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பீகார் சட்டப்பேரவை தேர்தலில் பெரும்பான்மைக்கு தேவையான இடத்திற்கு மேல் தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலையில் உள்ளதால் அக்கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கிறது.

பீகாரில் உள்ள 243 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த 6 மற்றும் 11ம் தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெற்றன. இந்தத் தேர்தல்களில் மொத்தம் 67 புள்ளி 13 சதவீத வாக்குகள் பதிவாகின. இதுதான் பீகாரில் அதிகபட்ச வாக்குப்பதிவு எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.

இந்தநிலையில் தேர்தலில் பதிவான வாக்குகள் 46 மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் காலை 8 மணிக்கு எண்ணும் பணி தொடங்கியது. இதில் தொடக்கம் முதலே பாஜக கூட்டணி முன்னிலை வகித்து வந்தது. தற்போதைய நிலவரப்படி, ஆட்சி அமைப்பதற்கு தேவையான இடங்களையும் தாண்டி 200-க்கும் மேற்படஇடங்களுக்கு மேல் தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலையில் உள்ளது.

அதில் பாஜக 95 இடங்களிலும் முதலமைச்சர் நிதிஷ்குமாரியின் ஐக்கிய ஜனதா தளம் 84 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. இந்தியா கூட்டணி வெறும் 32 இடங்களின் மட்டுமே முன்னிலையில் உள்ளது. அதில் ராஷ்டிரிய ஜனதா தளம் 25 இடங்களிலும் காங்கிரஸ் 1 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது..

இதனிடையே கருத்து கணிப்பில் கூறப்பட்ட இடத்திற்கு மேல் என்டிஏ கூட்டணி முன்னிலையில் உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி 130 முதல் 160 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் எனப் பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் கூறப்பட்டன.

ஆனால் எதிர்பார்த்ததைவிட தேசிய ஜனநாயக கூட்டணி 200 இடங்களுக்கு மேல் முன்னிலையில் உள்ளது. இதேபோல் மகாகத்பந்தன் கூட்டணி 73 முதல் 91 இடங்களில் வெற்றி பெறும் எனக் கூறப்பட்ட நிலையில், 29 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது.

அதேபோல, பீகார் சட்டப் பேரவை தேர்தலில் போட்டியிட்ட 101 தொகுதிகளில் 95 இடங்களில் பாஜக முன்னிலையில் உள்ளது. இதனால் அம்மாநிலத்தில் பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவாகி உள்ளது. கூட்டணி கட்சியான நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தள கட்சி 84 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

இதனிடையே தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலையில் உள்ளதை அடுத்து பாட்னாவில் உள்ள ஐக்கிய தன தள கட்சி தலைமை அலுவலகத்தில் அக்கட்சியினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். கட்சி கொடியை அசைத்தும், முதலமைச்சர் நிதிஷ்குமாரின் புகைப்படத்தை ஏந்தியும் அவர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கித் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இதேபோல் பீகாரில் பாஜக தனிப் பெரும் கட்சியாக உருவானதை அடுத்து தலைநகர் பாட்னாவில் அக்கட்சியின் தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். பிரதமர் மோடியின் உருவம் கொண்ட அலங்கரிக்கப்பட்ட தேரில் அவர்கள் ஊர்வலமாக சென்றனர். மேலும் பாஜக பெண் தொண்டர்கள் மேள, தாளங்கள் முழங்கியும் பாட்டு பாடியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags: bihar election 2025Bihar Assembly Election Results - NDA Alliance Continues to Leadஎன்டிஏ கூட்டணிபீகார் சட்டப்பேரவை தேர்தல் முடிவுதேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலை
Share
Tweet
SendShare
Previous Post

புல்லட் ரயில் நிலையத்தை நாளை பார்வையிடுகிறார் பிரதமர் மோடி!

Next Post

பீகாரில் மீண்டும் ஆட்சி அமைக்கிறது என்டிஏ கூட்டணி – பாஜகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

Related News

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

லண்டன் கார் பந்தயம் : 3-ம் இடம் பிடித்து அஜித் அணி அசத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies