டியாங்கோங் விண்வெளி நிலையத்தில் சிக்கிக் கொண்ட சீன விண்வெளி வீரர்கள் மூன்று பேர், மாற்று விண்கலம் வாயிலாகப் பூமிக்கு பத்திரமாகத் திரும்பினர்.
சீனாவுக்கு சொந்தமான டியாங்கோங் விண்வெளி நிலையத்தில் ஆய்வு செய்வதற்காக, ஆறு மாதத்திற்கு ஒருமுறை மாற்று முறையில் சீன விண்வெளி வீரர்கள் சென்று வருவது வழக்கம்.
அந்த வகையில், சீன விண்வெளி வீரர்களான சென் டோங், சென் ஜோங்ருய் மற்றும் வாங் ஜீ ஆகியோர், ஷென்சோ – 20 எனும் விண்கலம் வாயிலாகக் கடந்த மே 3ம் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்துக்குப் பயணம் மேற்கொண்டனர்.
கடந்த 5-ம் தேதி அவர்கள் பூமி திரும்புவதாகத் திட்டமிட்டிருந்த நிலையில், அவர்கள் சென்ற விண்கலத்தின் மீது விண்வெளி குப்பைகள் மோதியதில் சேதம் ஏற்பட்டது.
இதனால் அவர்கள் பூமிக்கு திரும்புவது தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது. அவர்கள் மேலும் ஒன்பது நாட்கள் அங்கேயே தங்க நேரிட்டது.
இந்நிலையில் விண்வெளி வீரர்களை மீண்டும் பூமிக்கு அழைத்து வர ஷென்சோ – 21 என்ற விண்கலத்தைச் சீனா அனுப்பியது.
இதில் வெள்ளிக்கிழமையன்று புறப்பட்ட மூன்று வீரர்களும், வடக்கு சீனாவில் உள்ள மங்கோலியாவின் டோங்பெங் என்ற தரையிறங்கும் தளத்தில் பத்திரமாகத் தரையிறங்கினர்.
மூன்று வீரர்களும் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாகச் சீன விண்வெளி நிறுவனம் தெரிவித்துள்ளது.
















