கடற்படை தளத்தை தூசி தட்டிய அமெரிக்கா : கரீபியன் தீவில் அதிகரிக்கும் போர் பதற்றம் - சிறப்பு தொகுப்பு!
Nov 16, 2025, 10:00 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கடற்படை தளத்தை தூசி தட்டிய அமெரிக்கா : கரீபியன் தீவில் அதிகரிக்கும் போர் பதற்றம் – சிறப்பு தொகுப்பு!

Web Desk by Web Desk
Nov 16, 2025, 08:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கரீபியன் தீவான PUERTO RICO – வில், 20 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த கடற்படை தளத்தை மீண்டும் திறந்து அமெரிக்கா போர் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

வெனிசுலா மீது வெளிப்படையாக போர் அறிவிக்கப்படுமோ என்ற அச்சம் சர்வதேச நாடுகள் மத்தியில் எழுந்துள்ளது. இதுகுறித்து விரிவாக பார்க்கலாம் இந்த செய்தித்தொகுப்பில்….

தென்அமெரிக்கா நாடுகளில் ஒன்றான வெனிசுலா, ஒரு காலத்தில் அமெரிக்காவின் நட்பு நாடாக இருந்து வந்தது. ஆனால், கடந்த 2000ம் ஆண்டில் இருநாடுகள் இடையே போதைப்பொருள் கடத்தல் காரணமாக பிரச்னை ஏற்பட்டது.

வெனிசுலாவின் அதிபராக இருந்த ஹூகோ சாவேஷ் மற்றும் நிகோலஸ் மதுரோ ஆகியோரின் செயல்பாடு அமெரிக்காவுக்கு பிடிக்கவில்லை. இதனால் இருநாடுகள் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது. இந்த விரிசல் தற்போது பூதாகரமாக வெடித்துள்ளது.

வெனிசுலாவும், அமெரிக்காவும் நேரடியாக எல்லைகளை பகிர்ந்து கொள்ளவில்லை. இருப்பினும் இருநாடுகள் இடையே கரிபீயன் கடல் அமைந்துள்ளதால், அதன் வழியாக அமெரிக்காவுக்கு போதைப்பொருள் கடத்தப்படுவதாக நீண்ட காலமாக குற்றம் சாட்டப்படுகிறது. இந்த குற்றச்சாட்டையே தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்பும் முன்வைக்கிறார்.

இதனால் இருநாடுகள் இடையேயான உறவு நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. நிகோலஸ் மதுரோவின் ஆட்சியை கவிழ்க்கவும், அவரை கைது செய்யவும் உதவினால் 438 கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும் எனவும் ட்ரம்ப் அறிவித்ததன் மூலம், எத்தகைய மோதல் போக்கு நிலவுகிறது என்பதை புரிந்து கொள்ள முடியும்.

அண்மைகாலமாக, கரீபியன் கடலில் போதைப்பொருள் கடத்தும் கப்பல்களை குறிவைத்து அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகிறது. OPERATION SOUTHERN SPEAR என்ற பெயரில் அமெரிக்கா மேற்கொள்ளும் நடவடிக்கை வெனிசுலாவை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதனால், இருநாடுகளுக்கு இடையேயான மோதல் போக்கு மேலும் வலுத்துள்ளது. வெனிசுலாவில் ஆட்சி கவிழ்ப்பு நடத்தப்படுமா என எழுப்பட்ட கேள்விக்கு, எதுவேண்டுமானாலும் நடக்கலாம் என ட்ரம்ப் தெரிவித்ததும் எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றியுள்ளது.

இந்நிலையில், கரீபியன் தீவில் தனது கட்டுப்பாட்டில் உள்ள PUERTO RICO – வில், இருபது ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த கடற்படை தளத்தை அமெரிக்கா மீண்டும் திறந்திருப்பது, போர் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. PUERTO RICO – வில் அமெரிக்காவுக்கு சொந்தமாக 5 கடற்படை தளங்கள் உள்ளன.

இதில் ROOSEVELT ROADS கடற்படை தளம் நிதி பற்றாக்குறை காரணமாக கடந்த 2004-ம் ஆண்டில் மூடப்பட்டது. இந்நிலையில், கடற்படை தளத்தை மீண்டும் அமெரிக்கா தூசி தட்டியிருப்பது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால், வடக்கு வெனிசுலாவுக்கும், ROOSEVELT ROADS கடற்படை தளத்திற்கும் இடையேயான தூரம் 500 மைல் மட்டுமே.

PUERTO RICO – வில் உள்ள கடற்படை தளங்களில் F-35 போர் விமானங்கள், B-52 BOMBER ரக விமானங்கள், MQ-9 Reaper ட்ரோன்கள் ஆகியவற்றை அமெரிக்கா நிலைநிறுத்தியிருக்கும் நிலையில், வெனிசுலாவும் தன் பங்கிற்கு தளவாடங்களை குவித்து வருகிறது.

ஈரான் வழங்கிய Kamikaze ட்ரோன்களை, வடக்கு பகுதியில் உள்ள கடற்படை தளங்களில் குவித்திருக்கும் நிகோலஸ் மதுரோ அரசு, சீனா மற்றும் ரஷ்யாவின் உதவியையும் நாடியிருக்கிறது. ரஷ்யாவின் உளவு கப்பலும், சீனாவின் மருத்துவ உதவி கப்பலும், PUERTO RICO ஒட்டிய OAHU பகுதியில் நங்கூரமிட்டுள்ளதால், மீண்டும் உலக போர் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் சர்வதேச நாடுகள் மத்தியில் எழுந்துள்ளது.

Tags: Venezuelan President Hugo ChavezNicolas Maduro.United StatesPUERTO RICOUnited States reopened naval baseCaribbean island
ShareTweetSendShare
Previous Post

மயிலாடுதுறையில் காவிரி துலா உற்சவ தீர்த்தவாரி விழா கோலாகலம்!

Next Post

ஐப்பசி மாத கடை முழுக்கை – குடந்தை நாகேஸ்வரர் கோயிலில் தீர்த்தவாரி!

Related News

இந்தியா – இஸ்ரேலின் MR-SAM ஏவுகணை கூட்டு தயாரிப்பு – விரைவில் ஒப்பந்தம் கையெழுத்து : சிறப்பு தொகுப்பு!

ஐப்பசி மாத கடை முழுக்கை – குடந்தை நாகேஸ்வரர் கோயிலில் தீர்த்தவாரி!

மயிலாடுதுறையில் காவிரி துலா உற்சவ தீர்த்தவாரி விழா கோலாகலம்!

“கண்ணான கண்ணே” மைதிலி தாக்கூர் – அரசியலில் சாதித்த நாட்டுப்புற பாடகி – சிறப்பு தொகுப்பு!

பிபிசி மீது சட்ட நடவடிக்கை எடுக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டம்!

ராமகிருஷ்ணர், விவேகானந்தர் பக்தர்கள் மாநாடு – மதுரையில் நடைபெற்ற முகூர்த்தக்கால் நடும் விழா!

Load More

அண்மைச் செய்திகள்

கடற்படை தளத்தை தூசி தட்டிய அமெரிக்கா : கரீபியன் தீவில் அதிகரிக்கும் போர் பதற்றம் – சிறப்பு தொகுப்பு!

குருதட்சணை மூலமாக ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு நிதி – மோகன் பகவத்

S.I.R படிவங்களை விநியோகம் செய்வதில் திமுக ஆதிக்கம் – தவெக குற்றச்சாட்டு!

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் – இந்தியா தோல்வி!

திருப்பூர் அருகே போலி கலப்பட நெய் ஆலைக்கு சீல்!

தெலங்கானாவில் சாலையில் நின்ற மணல் லாாி மீது ஆம்னி பேருந்து மோதல் – இருவர் பலி!

சத்தீஸ்கர் மாநிலத்தில் 3 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை!

ஆவடியில் கணவர் இயக்கிய புதிய கார் மோதியதில், மனைவி உயிரிழந்த சோகம்!

மெக்சிகோவில் அரசாங்கத்திற்கு எதிரான GenZ போராட்டத்தில் கலவரம்!

வேலை வாங்கி தருவதாக பணமோசடி – அண்ணா பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் கலாநிதி மீது வழக்குப்பதிவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies