டெல்லி தாக்குதல் விசாரணையில் திடீர் திருப்பம் - தாக்குதலுக்கு "சாத்தானின் தாய்" பயன்படுத்தப்பட்டதா?
Jan 14, 2026, 03:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

டெல்லி தாக்குதல் விசாரணையில் திடீர் திருப்பம் – தாக்குதலுக்கு “சாத்தானின் தாய்” பயன்படுத்தப்பட்டதா?

Murugesan M by Murugesan M
Nov 18, 2025, 10:19 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டெல்லி கார்வெடிப்புக்கு அம்மோனியம் நைட்ரேட் பயன்படுத்தப்பட்டதாகத் தொடக்கத்தில் கூறப்பட்டு வந்தது. ஆனால், தற்போது சக்திவாய்ந்த வேறொரு வெடிபொருளை கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அது என்ன வெடிபொருள்?. இந்தச் செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

2015ம் ஆண்டு ஃபிரான்ஸ் தலைநகர் பாரீசில் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டது. அதில் 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அதே போல் 2016ம் ஆண்டு பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் (Brussels) நடத்தப்பட்ட தொடர் தாக்குதல்களில் 32 பேர் பலியாகினர். 2017ம் ஆண்டு பார்சிலோனாவிலும், மான்செஸ்டரிலும் அடுத்தடுத்து நடத்தப்பட்ட தாக்குதல்களில் சுமார் 35 பேர் உயிரிழந்தனர்.

உலகின் பல பகுதிகளில் நடத்தப்பட்ட இந்த அனைத்து தாக்குதல்களிலும் ஒரு ஒற்றுமை உள்ளது. TATP எனப்படும் ட்ரை-அசிட்டோன் ட்ரை-பெராக்சைடு (Triacetone triperoxide) வெடிப்பொருளை பயன்படுத்திதான் இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

இந்த TATP பலத்த சேதத்தை விளைவிப்பதால், “சாத்தானின் தாய்” என்ற அடைமொழியில் இது அழைக்கப்படுகிறது. இந்தச் சூழலில், டெல்லி தாக்குதலிலும் TATP-ன் பங்கு உள்ளதா என்பதுதான் தற்போது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. டெல்லி தாக்குதல் குறித்த ஆரம்பக்கட்ட விசாரணையின்போது அம்மோனியம் நைட்ரேட்டை கொண்டு இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் எனக் கருதப்பட்டது.

டெல்லி சம்பவத்திற்கு சில நாட்களுக்கு முன்பு ஃபரிதாபாத்தில் கிலோ கணக்கில் அம்மோனியம் நைட்ரேட் பறிமுதல் செய்யப்பட்டது இந்தச் சந்தேகத்திற்கு காரணமாக அமைந்தது. ஆனால், அடுத்தடுத்த கட்ட விசாரணைகளின் முடிவில் போலீசாரின் பார்வை TATPன் பக்கம் நகர்ந்துள்ளது. பொதுவாக வெடிப்பொருட்களை வெடிக்க செய்ய டெட்டனேட்டர்கள் தேவைப்படும். அந்த டெட்டனேட்டர்களை வாங்குவது என்பது சாதாரண காரியமல்ல.

அவற்றின் உற்பத்தி, விற்பனை, சேமிப்பு, பயன்பாடு என அனைத்திற்கும் மிக கறாரான கட்டுப்பாடுகள் உள்ளன. ஆனால், TATP வெடிமருந்தை வெடிக்க வைக்க டெட்டனேட்டர்களின் உதவியே தேவையில்லை. அசிட்டோன் மற்றும் ஹைட்ரஜன் பெராக்சைடு போன்ற பொதுவான ரசாயனங்களில் இருந்தே இது தயாரிக்கப்படுகிறது. இதில் உள்ள பெராக்சைடு மிகவும் பலவீனமான மூலக்கூறுகளை கொண்டுள்ளதால், சிறிய அளவிலாள வெளித்தூண்டுதலே போதும். இது பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறி கற்பனை செய்ய முடியாத சேதங்களை ஏற்படுத்திவிடும்.

சாதாரண அதிர்ச்சி, உராய்வு, அழுத்தம், குறைந்த அளவிலான வெப்பநிலை உள்ளிட்டவை கூட Triacetone triperoxide வெடிக்க காரணமாக அமையலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர். இதன் காரணமாகத்தான், உலகம் முழுவதும் தீவிரவாத தாக்குதல்களுக்கு, பயங்கரவாதிகளின் முதன்மை தேர்வாக TATP இருந்து வருகிறது.

டெல்லி தாக்குதலுக்கு TATP பயன்படுத்தபட்டதா என்பது குறித்து ஆய்வக பரிசோதனைகள் தற்போது நடைபெற்று வருகின்றன. அதற்காக, விபத்து நடைபெற்ற இடத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட பொருட்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன

. TATP-தான் பயன்படுத்தபட்டது என்றால், அந்த வெடிப்பொருளை உமர் நபி எவ்வாறு பெற்றார், யார் யார் அவருக்கு உதவினார்கள் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags: விசாரணையில் திடீர் திருப்பம்சாத்தானின் தாய்delhi car blastdelhi bombcar bomb blastSudden twist in Delhi attack investigation - Was "Mother of Satan" used in the attack?டெல்லி தாக்குதல்
ShareTweetSendShare
Previous Post

கட்டாய மதமாற்றம் செய்ய தனி ‘நெட்வொர்க்’ – இந்திய யாத்ரீகர்களை குறிவைக்கும் பாகிஸ்தான்!

Next Post

குப்பைக் கிடங்கில் தேங்கும் இறைச்சி கழிவுகள் : துர்நாற்றம் வீசுவதால் மக்கள் அவதி!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies