டெல்லி தாக்குதல் விசாரணையில் திடீர் திருப்பம் - தாக்குதலுக்கு "சாத்தானின் தாய்" பயன்படுத்தப்பட்டதா?
Sep 12, 2026, 02:13 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

டெல்லி தாக்குதல் விசாரணையில் திடீர் திருப்பம் – தாக்குதலுக்கு “சாத்தானின் தாய்” பயன்படுத்தப்பட்டதா?

Murugesan M by Murugesan M
Nov 18, 2025, 10:19 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

டெல்லி கார்வெடிப்புக்கு அம்மோனியம் நைட்ரேட் பயன்படுத்தப்பட்டதாகத் தொடக்கத்தில் கூறப்பட்டு வந்தது. ஆனால், தற்போது சக்திவாய்ந்த வேறொரு வெடிபொருளை கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அது என்ன வெடிபொருள்?. இந்தச் செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

2015ம் ஆண்டு ஃபிரான்ஸ் தலைநகர் பாரீசில் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டது. அதில் 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அதே போல் 2016ம் ஆண்டு பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் (Brussels) நடத்தப்பட்ட தொடர் தாக்குதல்களில் 32 பேர் பலியாகினர். 2017ம் ஆண்டு பார்சிலோனாவிலும், மான்செஸ்டரிலும் அடுத்தடுத்து நடத்தப்பட்ட தாக்குதல்களில் சுமார் 35 பேர் உயிரிழந்தனர்.

உலகின் பல பகுதிகளில் நடத்தப்பட்ட இந்த அனைத்து தாக்குதல்களிலும் ஒரு ஒற்றுமை உள்ளது. TATP எனப்படும் ட்ரை-அசிட்டோன் ட்ரை-பெராக்சைடு (Triacetone triperoxide) வெடிப்பொருளை பயன்படுத்திதான் இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

இந்த TATP பலத்த சேதத்தை விளைவிப்பதால், “சாத்தானின் தாய்” என்ற அடைமொழியில் இது அழைக்கப்படுகிறது. இந்தச் சூழலில், டெல்லி தாக்குதலிலும் TATP-ன் பங்கு உள்ளதா என்பதுதான் தற்போது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. டெல்லி தாக்குதல் குறித்த ஆரம்பக்கட்ட விசாரணையின்போது அம்மோனியம் நைட்ரேட்டை கொண்டு இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் எனக் கருதப்பட்டது.

டெல்லி சம்பவத்திற்கு சில நாட்களுக்கு முன்பு ஃபரிதாபாத்தில் கிலோ கணக்கில் அம்மோனியம் நைட்ரேட் பறிமுதல் செய்யப்பட்டது இந்தச் சந்தேகத்திற்கு காரணமாக அமைந்தது. ஆனால், அடுத்தடுத்த கட்ட விசாரணைகளின் முடிவில் போலீசாரின் பார்வை TATPன் பக்கம் நகர்ந்துள்ளது. பொதுவாக வெடிப்பொருட்களை வெடிக்க செய்ய டெட்டனேட்டர்கள் தேவைப்படும். அந்த டெட்டனேட்டர்களை வாங்குவது என்பது சாதாரண காரியமல்ல.

அவற்றின் உற்பத்தி, விற்பனை, சேமிப்பு, பயன்பாடு என அனைத்திற்கும் மிக கறாரான கட்டுப்பாடுகள் உள்ளன. ஆனால், TATP வெடிமருந்தை வெடிக்க வைக்க டெட்டனேட்டர்களின் உதவியே தேவையில்லை. அசிட்டோன் மற்றும் ஹைட்ரஜன் பெராக்சைடு போன்ற பொதுவான ரசாயனங்களில் இருந்தே இது தயாரிக்கப்படுகிறது. இதில் உள்ள பெராக்சைடு மிகவும் பலவீனமான மூலக்கூறுகளை கொண்டுள்ளதால், சிறிய அளவிலாள வெளித்தூண்டுதலே போதும். இது பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறி கற்பனை செய்ய முடியாத சேதங்களை ஏற்படுத்திவிடும்.

சாதாரண அதிர்ச்சி, உராய்வு, அழுத்தம், குறைந்த அளவிலான வெப்பநிலை உள்ளிட்டவை கூட Triacetone triperoxide வெடிக்க காரணமாக அமையலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர். இதன் காரணமாகத்தான், உலகம் முழுவதும் தீவிரவாத தாக்குதல்களுக்கு, பயங்கரவாதிகளின் முதன்மை தேர்வாக TATP இருந்து வருகிறது.

டெல்லி தாக்குதலுக்கு TATP பயன்படுத்தபட்டதா என்பது குறித்து ஆய்வக பரிசோதனைகள் தற்போது நடைபெற்று வருகின்றன. அதற்காக, விபத்து நடைபெற்ற இடத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட பொருட்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன

. TATP-தான் பயன்படுத்தபட்டது என்றால், அந்த வெடிப்பொருளை உமர் நபி எவ்வாறு பெற்றார், யார் யார் அவருக்கு உதவினார்கள் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags: விசாரணையில் திடீர் திருப்பம்சாத்தானின் தாய்delhi car blastdelhi bombcar bomb blastSudden twist in Delhi attack investigation - Was "Mother of Satan" used in the attack?டெல்லி தாக்குதல்
Share
Tweet
SendShare
Previous Post

கட்டாய மதமாற்றம் செய்ய தனி ‘நெட்வொர்க்’ – இந்திய யாத்ரீகர்களை குறிவைக்கும் பாகிஸ்தான்!

Next Post

குப்பைக் கிடங்கில் தேங்கும் இறைச்சி கழிவுகள் : துர்நாற்றம் வீசுவதால் மக்கள் அவதி!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

இலங்கை நுவரெலியா சீதையம்மன் ஆலயத்தில் ராஜ்நாத்சிங் சாமி தரிசனம்!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியா வந்தார் ரஷ்ய அதிபர் புதின் – விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

5 ஈரான் எண்ணெய் கப்பல்களை தாக்கி அழித்த அமெரிக்கா – மீண்டும் உக்கிரமடையும் தாக்குதல் – சிறப்பு தொகுப்பு!

பிரிக்ஸ் உச்சி மாநாடு : சீனாவுடன் வர்த்தக உறவை மேம்படுத்தும் முயற்சியில் இந்தியா தீவிரம் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies