பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களைக்கட்டத் தொடங்கியுள்ளன.
கிறிஸ்துமஸ் பண்டிகளை உலகம் முழுவதும் அடுத்த மாதம் 25 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களைக்கட்டத் தொடங்கியுள்ளன.
பாரிஸின் Champs-Elysees முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து இரவில் நடைபெற்ற இந்த கொண்டாட்டத்தின்போது வண்ண விளக்குகளால் ஜொலித்த காட்சிகள் இரவைப் பகலாக்கின.
தொடர்ந்து கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இசை நிகழ்ச்சியும் நடத்தப்பட்டன. வண்ண மயமாக நடைபெற்ற இந்தக் கிறிஸ்துமஸ் தொடக்க கொண்டாட்டம் வெகுவாகக் கவர்ந்தது.
தொடர்ந்து ஜனவரி 4 ஆம் தேதி வரை இங்கு வண்ண விளக்குகளுடன் கொண்டாட்டங்கள் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
















