கோவையில் நடைபெற்ற இந்திய மண்ணியல் சங்கத்தின் மாநாட்டில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்திய மண்ணியல் சங்கத்தின் 89வது ஆண்டு மாநாடு கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது.
இதில், இந்தியா முழுவதும் புகழ்பெற்ற மண்ணியல் விஞ்ஞானிகள், கல்வியாளர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்த மாநாட்டில் இந்திய மண்ணியல் சங்கம் மற்றும் தமிழக அரசு முன்னெடுத்துள்ள மண் ஆரோக்கியம், மண்வளக் குறைபாடு, ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ளிட்டவைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
மேலும், உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான பல்வேறு தொழில்நுட்பங்கள் மற்றும் ஆராய்ச்சிகள் சம்பந்தமாகத் தற்போதைய சவால்கள் கட்டுரைகள் ஆகியவை விவாதங்களில் முன் வைக்கப்பட்டது.
















