சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்ற சோதனையில் சுமார் 18 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
நிலம் கையகப்படுத்தும் செயல்பாடுகளில் போலி ஆவணங்கள் மூலம் பெரிய அளவிலான மோசடி தொடர்பாக சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 15 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அதன் முடிவில், ஒரு கோடியே 56 லட்சம் பணம் மற்றும் 74 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் வெள்ளி கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலும் வங்கி கணக்குகளில் உள்ள 8.4 கோடி ரூபாய் மற்றும் பங்குகள் சுமார் 7.4 கோடி முடக்கம் செய்யப்பட்டிருப்பதாக அமலாக்கத்துறை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, மொத்தமாக 18 கோடியே 10 லட்சம் மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
















