சீனாவுடன் நல்லுறவை வலுப்படுத்தும் நோக்கில், அந்நாட்டினர் உலகம் முழுவதும் உள்ள இந்திய தூதரகங்களில் பெற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2020-ஆம் ஆண்டு கிழக்கு லடாக் எல்லை பகுதியில் இந்திய, சீன ராணுவத்தினா் இடையே மோதல் ஏற்பட்டது. இதன் காரணமாக இருநாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டது. இதையடுத்து, சீனர்களுக்கான சுற்றுலா விசாவை மத்திய அரசு நிறுத்தியது.
அதனைத்தொடர்ந்து, கடந்த ஆண்டு ரஷ்யாவின் காசனில் நடந்த பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஷீ ஜின்பிங் ஆகியோர் சந்தித்து பேசினர். அப்போது, இருநாட்டு உறவுகளை மேம்படுத்தும் வகையில் எல்லைப் பகுதியில் நிலைநிறுத்தப்பட்ட படைகள் பரஸ்பரமாக விலக்கிக் கொள்ளப்பட்டன.
அதேபோல் சீன மக்கள், இந்தியாவுக்கு சுற்றுலா செல்ல ஏதுவாக சுற்றுலா விசா வழங்கும் சேவையும் கடந்த ஜூலையில் தொடங்கியது. எனினும், சீனாவின் பீஜிங், ஷாங்காய், குவாங்சோ ஆகிய இடங்களில் உள்ள இந்திய விசா விண்ணப்ப மையங்களில் மட்டுமே சீனர்கள் விண்ணப்பிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், அந்த விசாவை தற்போது உலகம் முழுவதும் உள்ள இந்திய தூதரகங்கள் மற்றும் துணைத் தூதரகங்களில் சீனா்கள் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
















