கோவையில் S.I.R முகாமில் முறைகேட்டில் ஈடுபட்ட திமுகவினரை தட்டிக் கேட்ட அதிமுகவினரை திமுக மாமன்ற உறுப்பினர் மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட நஞ்சுண்டாபுரம் பகுதியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த முகாம் நடைபெற்றது. இதில் திமுகவை சேர்ந்தவர்கள் போலி வாக்காளர்களை சேர்த்து உண்மையான வாக்காளர்களை நீக்கும் பணியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதனை தட்டிக் கேட்ட அதிமுகவினரை 62-ஆவது வார்டு திமுக மாமன்ற உறுப்பினர் ரேவதியின் கணவர் முரளி, மதுபோதையில் மிரட்டி தகராறு செய்ததாக தெரிகிறது. இதுதொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது..
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவுடன் பூத் லெவல் அலுவர்களாக திமுக நிர்வாகிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
















