உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்ற சூர்யகாந்த் வழங்கிய முக்கிய தீர்ப்புகள்!
Mar 15, 2026, 02:12 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்ற சூர்யகாந்த் வழங்கிய முக்கிய தீர்ப்புகள்!

Ramamoorthy S by Ramamoorthy S
Nov 24, 2025, 12:57 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உச்ச நீதிமன்றத்தின் 53-வது தலைமை நீதிபதியாக பதவியேற்ற நீதிபதி சூர்யகாந்த் வழங்கிய முக்கிய தீர்ப்புகளின் விவரங்களை பார்க்கலாம்…

2019 முதல் உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாக பதவி வகித்த சூர்யகாந்த் கடந்த 6 ஆண்டுகளில் முக்கியமான தீர்ப்புகளை வழங்கிய நீதிபதிகளின் ஒருவராக விளங்கியுள்ளார்.

அதன்படி, காலனித்துவ காலத்தில் கொண்டுவரப்பட்ட தேசத்துரோக சட்டத்தின் கீழ், முதல் தகவல் அறிக்கைகளை பதிவு செய்ய வேண்டாம் என மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு உத்தரவிட்ட உச்சநீதிமன்ற அமர்வில் இடம் பெற்றிருந்தார்.

நாட்டியே அதிர வைத்த “பெகாசஸ்” உளவு நடவடிக்கைக்கு எதிரான வழக்கில், குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க தொழில்நுட்ப குழுவை அமைத்து உத்தரவிட்ட அமர்வில் நீதிபதியாக இடம் பெற்றார்.

தன் பாலின திருமணங்களை சட்டபூர்வமாக அங்கீகரிக்க மறுத்து உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் ஒரு நீதிபதியாக இருந்தார். 2024ல் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பான வழக்கில், பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மறு தேர்வை நடத்தும்படி தீர்ப்பு வழங்கியுள்ளார்.

ஜம்மு – காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து 370 நீக்கத்தை உறுதி செய்த உச்சநீதிமன்ற 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வில் ஒருவராக இடம்பெற்றிருந்தார்.

முன்னாள் ராணுவ வீரர்களுக்கான ஒரு பதவி ஒரு ஓய்வூதியம் எனும் திட்டத்தை உறுதி செய்ததோடு, மத்திய அரசு வழங்க வேண்டிய நிலுவைத் தொகைக்கு காலக்கெடு விதித்து உத்தரவிட்டார். இணைய சேவையை கால வரையறையின்றி நிறுத்தி வைக்க முடியாது என்றும், இணைய அணுகல் என்பது பேச்சுரிமையின் ஒரு பகுதி என்று தீர்ப்பு வழங்கிய அமர்வில் இடம்பெற்றார்.

உச்சநீதிமன்ற வழக்கறிஞர் சங்கம் உட்பட நாடு முழுவதும் உள்ள வழக்கறிஞர் சங்கங்களில் மூன்றில் ஒரு பங்கு பெண்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என உத்தரவிட்டார். குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநருக்கு மசோதா மீது முடிவெடுக்க கால நிர்ணயம் செய்த தீர்ப்பு தொடர்பான மனுவை விசாரித்து தீர்ப்பு வழங்கிய அரசியல் சாசன அமர்வில் நீதிபதி சூர்யகாந்த் இடம் பெற்றிருந்தார்.

Tags: Supreme Court Chief JusticeJustice Suryakanthimportant judgement of suriyakanth
ShareTweetSendShare
Previous Post

உத்தராகண்ட் : அரசு பள்ளி அருகே 20 கிலோ எடையுள்ள 161 ஜெலட்டின் குச்சிகள் கண்டெடுப்பு!

Next Post

நாகையில் மயானத்திற்கு சாலை அமைத்து தருமாறு பொதுமக்கள் கோரிக்கை!

Related News

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies