உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்ற சூர்யகாந்த் வழங்கிய முக்கிய தீர்ப்புகள்!
Aug 15, 2026, 10:12 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்ற சூர்யகாந்த் வழங்கிய முக்கிய தீர்ப்புகள்!

Ramamoorthy S by Ramamoorthy S
Nov 24, 2025, 12:57 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

உச்ச நீதிமன்றத்தின் 53-வது தலைமை நீதிபதியாக பதவியேற்ற நீதிபதி சூர்யகாந்த் வழங்கிய முக்கிய தீர்ப்புகளின் விவரங்களை பார்க்கலாம்…

2019 முதல் உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாக பதவி வகித்த சூர்யகாந்த் கடந்த 6 ஆண்டுகளில் முக்கியமான தீர்ப்புகளை வழங்கிய நீதிபதிகளின் ஒருவராக விளங்கியுள்ளார்.

அதன்படி, காலனித்துவ காலத்தில் கொண்டுவரப்பட்ட தேசத்துரோக சட்டத்தின் கீழ், முதல் தகவல் அறிக்கைகளை பதிவு செய்ய வேண்டாம் என மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு உத்தரவிட்ட உச்சநீதிமன்ற அமர்வில் இடம் பெற்றிருந்தார்.

நாட்டியே அதிர வைத்த “பெகாசஸ்” உளவு நடவடிக்கைக்கு எதிரான வழக்கில், குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க தொழில்நுட்ப குழுவை அமைத்து உத்தரவிட்ட அமர்வில் நீதிபதியாக இடம் பெற்றார்.

தன் பாலின திருமணங்களை சட்டபூர்வமாக அங்கீகரிக்க மறுத்து உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் ஒரு நீதிபதியாக இருந்தார். 2024ல் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பான வழக்கில், பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மறு தேர்வை நடத்தும்படி தீர்ப்பு வழங்கியுள்ளார்.

ஜம்மு – காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து 370 நீக்கத்தை உறுதி செய்த உச்சநீதிமன்ற 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வில் ஒருவராக இடம்பெற்றிருந்தார்.

முன்னாள் ராணுவ வீரர்களுக்கான ஒரு பதவி ஒரு ஓய்வூதியம் எனும் திட்டத்தை உறுதி செய்ததோடு, மத்திய அரசு வழங்க வேண்டிய நிலுவைத் தொகைக்கு காலக்கெடு விதித்து உத்தரவிட்டார். இணைய சேவையை கால வரையறையின்றி நிறுத்தி வைக்க முடியாது என்றும், இணைய அணுகல் என்பது பேச்சுரிமையின் ஒரு பகுதி என்று தீர்ப்பு வழங்கிய அமர்வில் இடம்பெற்றார்.

உச்சநீதிமன்ற வழக்கறிஞர் சங்கம் உட்பட நாடு முழுவதும் உள்ள வழக்கறிஞர் சங்கங்களில் மூன்றில் ஒரு பங்கு பெண்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என உத்தரவிட்டார். குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநருக்கு மசோதா மீது முடிவெடுக்க கால நிர்ணயம் செய்த தீர்ப்பு தொடர்பான மனுவை விசாரித்து தீர்ப்பு வழங்கிய அரசியல் சாசன அமர்வில் நீதிபதி சூர்யகாந்த் இடம் பெற்றிருந்தார்.

Tags: Supreme Court Chief JusticeJustice Suryakanthimportant judgement of suriyakanth
Share
Tweet
SendShare
Previous Post

உத்தராகண்ட் : அரசு பள்ளி அருகே 20 கிலோ எடையுள்ள 161 ஜெலட்டின் குச்சிகள் கண்டெடுப்பு!

Next Post

நாகையில் மயானத்திற்கு சாலை அமைத்து தருமாறு பொதுமக்கள் கோரிக்கை!

Related News

தேசப்பற்றுக்கு முன்னுதாரணம்; ராணுவப்பேட்டை என அடைமொழியுடன் அழைக்கப்படும் கிராமம்

போட்டித் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச ஆன்லைன் பயிற்சி – பிரதமர் மோடி

நக்சல் மனநிலை கொண்டவர்களை தனிமைப்படுத்த வேண்டும் – பிரதமர் மோடி

80-வது சுதந்திர தின விழா : மூவர்ண கொடியேற்றிய மாவட்ட ஆட்சியர்கள்!

வந்தே மாதரம் பாடலை பாதியில் நிறுத்தச்சொன்ன சோனியா காந்தி – பாஜக கண்டனம்!

கிருஷ்ணசாமி உள்ளிடோருக்கு முதல்வரின் நல் ஆளுமை விருது – விஜய் வழங்கி கௌரவித்தார்!

Load More

அண்மைச் செய்திகள்

உப்பு சத்தியாகிரகத்தில் சிறை சென்ற முதல் பெண் ருக்மிணி லட்சுமிபதி – சிறப்பு தொகுப்பு!

பஜனை பாடல்கள் மூலம் விடுதலை வேள்வியை மூட்டிய பங்கஜத்தம்மாள் : சிறப்பு தொகுப்பு!

80-வது சுதந்திர தினம் கோலாகலம் – கோட்டை கொத்தளத்தில் கொடியேற்றினார் முதல்வர் விஜய்!

சாதனை ஏணியில் சரித்திரம் படைக்கும் இந்திய பொருளாதாரம் – சிறப்பு தொகுப்பு!

சுதந்திர தினத்தன்று செங்கோட்டையில் ‘வந்தே மாதரம்’ முழங்குவது வரலாற்று சிறப்புமிக்க தருணம் – பிரதமர் மோடி உரை!

80-வது சுதந்திர தின விழா கோலாகல கொண்டாட்டம் – செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றினார் பிரதமர் மோடி!

அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துகள்!

திருப்பரங்குன்றம் மலையில் அளவீடு பணிகளை ஏன் முடிக்கவில்லை? – உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கேள்வி!

2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சி அடைந்த இந்தியாவை நோக்கி…. – குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரை!

சுதந்திர தின கொண்டாட்டம் – சென்னை கோட்டை கொத்தளத்தில் மூவர்ண கொடி ஏற்றுகிறார் முதலமைச்சர் விஜய்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies