நாகையில் மயானத்திற்கு செல்லச் சாலை அமைத்துத் தர வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வெல்லப்பாக்கம் கிராமத்தில் இறந்தவரின் உடலைச் சேறும் சகதியாகக் காணப்படும் சாலை வழியாகவும் தோட்டங்கள் வழியாகவும் மயானத்திற்கு கொண்டு செல்லும் நிலை உள்ளது.
இதனால் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வரும் பொதுமக்கள், மயானத்திற்கு சாலை அமைத்துத் தர வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
















