பாரதப் பிரதமர் மோடிக்கும், மத்திய இரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கும் மத்திய அமைச்சர் எல். முருகன் நன்றி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
கடலூர் மாவட்டம் பண்ருட்டி மார்க்கமாக வந்து செல்லும், திருப்பதி- மன்னார்குடி இடையிலான பாமணி விரைவு இரயிலானது, பண்ருட்டி இரயில் நிலையத்தில் நின்று செல்வது தொடர்பாக, மத்திய இரயில்வேத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம், அப்பகுதி மக்கள் சார்பாக கோரிக்கை வைத்திருந்தேன்.
தமிழகத்தில் இருந்து பண்ருட்டி சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் சார்பாக முன்னெடுக்கப்பட்ட இந்த கோரிக்கையினை ஏற்று, இனிமேற்கொண்டு பாமணி விரைவு இரயில் பண்ருட்டி இரயில் நிலையத்தில் நின்று செல்லும் என்கிற அதிகாரப்பூர்வ அறிவிக்கையை நமது மத்திய இரயில்வே அமைச்சகம் இன்று அளித்துள்ளது.
இதன்மூலம், பண்ருட்டி சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பலனடைவார்கள் என்பது மிகுந்த மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும்.
இந்த அறிவிப்பை வழங்கிய பாரதப் பிரதமர் மோடிக்கும், மத்திய இரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கும், தமிழக மக்கள் சார்பாகவும், பண்ருட்டி பகுதிவாழ் மக்கள் சார்பாகவும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று எல். முருகன் தெரிவித்துள்ளார்.
















