தருமபுரி மாவட்டம் அரூரில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கால் மக்கள் கயிறுக் கட்டி ஆற்றைக் கடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
வாச்சாத்தி, கலசப்பாடி செல்லும் சாலையில் உயர்மட்ட பாலம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் அப்பகுதியில் பெய்த தொடர் கனமழையால் மலை சாலையில் உள்ள காட்டாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் மக்கள் கயிறுக் கட்டி ஆபத்தான முறையில் ஆற்றைக் கடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
















