கரூர் சிபிஐ அலுவலகத்தில் தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகளிடம் 10 மணி நேரத்திற்கும் மேலாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
கரூர் துயர சம்பவ வழக்கில் சிபிஐ அதிகாரிகள் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் நடந்த வேலுச்சாமிபுரம் பகுதி மக்கள், வியாபாரிகள், ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் உள்ளிட்டோரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
மேலும், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் உறவினர்களிடமும், காயமடைந்தவர்களிடமும் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
அந்த வகையில் கரூர் சிபிஐ அலுவலகத்தில் தவெக பொதுச் செயலாளர் ஆனந்த், இணை பொதுச் செயலாளர் நிர்மல் குமார், தேர்தல் பிரிவு பொது செயலாளர் ஆதவ் அர்ஜுனா, மாவட்ட செயலாளர் மதியழகன், தவெக நிர்வாகி பவுன்ராஜ் ஆகியோர் விசாரணைக்கு ஆஜராகினர். வர்களிடம் 10 மணி நேரத்திற்கும் மேலாக அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மேலும் இந்த விசாரணை இன்றும் தொடரும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
















