கரூர் வெண்ணெய்மலை முருகர் கோவிலுக்குச் சொந்தமான நிலங்களை மீட்பது குறித்த வழக்கில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பான உத்தரவை நிறைவேற்றாத அலுவலர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரிய வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பலர் போராட்டத்தில் ஈடுபட்டதால் சட்டம் ஒழுங்குப் பிரச்னை ஏற்படும் சூழல் ஏற்பட்டதாக, மாவட்ட எஸ்பி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதனையடுத்து, இது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.
















