ராணிப்பேட்டை மாவட்டம் ஆம்பூர் அருகே 3 மாத பெண் குழந்தை, வீட்டின் தண்ணீர் தொட்டியில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெத்லேகம் பகுதியில் அக்பர் பாஷா, அர்ஷியா தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களின் 3 மாத பெண் குழந்தை வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டியில் உயிரிழந்து கிடந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
















