பஞ்சாபில், பிரபல கேங்ஸ்டர் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்த நான்கு பேரை போலீசார் சுட்டுப் பிடித்தனர்.
பஞ்சாபில் ரவுடி லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல், பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருகிறது. அந்த கும்பலைச் சேர்ந்த 4 பேர் தேரா பசாய் – அம்பாலா நெடுஞ்சாலையில் உள்ள வீட்டில் பதுங்கி உள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் அங்கு சென்று அவர்களை பிடிக்க முயன்றனர்.
அப்போது அக்கும்பல் போலீசாரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியது. போலீசாரும் அந்த கும்பல் மீது துப்பாக்கி சூடு நடத்தி பிடித்தனர். விசாரணையில் அவர்கள் ஹர்விந்தர் சிங், லக்விந்தர் சிங், முகமது சமீர் மற்றும் ரோகித் சர்மா என்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து பிஸ்டல்கள் மற்றும் வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் வெளிநாட்டில் பதுங்கியுள்ள ரவுடி கோல்டி பிரார் உத்தரவுப்படி சண்டிகர், மொகாலி, சண்டிகர் மற்றும் பஞ்சகுலா பகுதிகளில் தாக்குதல் நடத்த திட்டமிட்டது தெரியவந்தது.
















