தீக்கிரையான அடுக்குமாடி குடியிருப்பு : ஹாங்காங்கை உலுக்கிய கோர சம்பவம்!
Mar 15, 2026, 08:10 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

தீக்கிரையான அடுக்குமாடி குடியிருப்பு : ஹாங்காங்கை உலுக்கிய கோர சம்பவம்!

Murugesan M by Murugesan M
Nov 27, 2025, 07:52 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஹாங்காங்கில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து 14 பேரின் உயிரை காவு வாங்கியிருக்கிறது. ஹாங்காங் மக்களை உலுக்கிய இந்தக் கோர சம்பவம்குறித்து விவரிக்கிறது இந்தச் செய்தித்தொகுப்பு.

ஹாங்காங்கில் உள்ள தைப்போ மாவட்டத்தில் அமைந்திருக்கும் உயரமான அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் தான் இப்படிப்பட்ட பயங்கரமான தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. வளாகத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட இந்தத் தீ விபத்து, ஏழு கட்டங்களுக்கும் பரவியதால் நிலைமை கைமீறிப்போனது.

மொத்தம் 2000 அடுக்குமாடி குடியிருப்புகள் அமைந்துள்ள வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், முதலில் 4 பேர் பலியானதாகக் கூறப்பட்டது. ஆனால், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டவர்களை காப்பாற்ற முடியாமல் போனதால் பலி எண்ணிக்கை 10 -ஐ தாண்டியது. இந்த எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

தீ மிகவும் வேகமாகப் பரவுவதற்கு கட்டிடத்தின் வெளிப்புறத்தில் பழுதுபார்ப்புப் பணிகளுக்காக அமைக்கப்பட்டிருந்த மூங்கில் சாரங்கள் மற்றும் கட்டுமான வலைகள் காரணமாகக் கூறப்படுகிறது. இவை ஒரு கட்டிடத்திலிருந்து மற்றொரு கட்டடத்திற்கு தீ மிக வேகமாகப் பரவ வழிவகுத்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

இரவு நேரத்தில் ஏற்பட்ட இந்தத் தீ விபத்தை, பொழுது விடிந்தும் அணைக்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் திணறிணர். அடுக்குமாடி குடியிருப்புகளுக்குள் இன்னும் ஏராளமானோர் சிக்கியிருக்கக்கூடும் என்பதால் அவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் உயிரை பணயம் வைத்து ஈடுபட்டனர்.

ஹாங்காங்கின் தை போ மாவட்டத்தில், மக்கள் தொகை அதிகம் என்பதால், அங்குத் தனித்தனியே வீடுகளை கட்டுவது கடினம். அதன் காரணமாகவே, அங்கு அடுக்குமாடி குடியிருப்புகள் திரும்பும் திசையெல்லாம் நெருக்கடியாகக் கட்டப்பட்டுள்ளன. ஆனால், அவை பாதுகாப்பான முறையில் கட்டப்படுகின்றனவா? என்பது குறித்து ஹாங்காங் மக்கள் தற்போது கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளனர்.

Tags: Apartment fire: A horrific incident that shook Hong Kongதீக்கிரையான அடுக்குமாடி குடியிருப்புஹாங்காங்கை உலுக்கிய கோர சம்பவம்
ShareTweetSendShare
Previous Post

வங்கக்கடலில் உருவான டிட்வா புயல்!

Next Post

தவெகவில் இணைந்த செங்கோட்டையனுக்கு நிர்வாக குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

இங்கிலாந்தில் பெண்ணை உருளைக்கிழங்கு என கிண்டல் செய்த நபருக்கு 29 லட்சம் ரூபாய் அபராதம்!

17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் சந்தையில் விடுவிக்க டிரம்ப் உத்தரவு!

ஈரான் போரில் AI-யை பயன்படுத்திய US ராணுவம் – அமெரிக்காவை எச்சரித்த சீனா!

ஈரான் போரால் கிடைத்த வாய்ப்பு – கச்சிதமா பயன்படுத்தி லாபத்தை அள்ளிய ரஷ்யா!

ஆபிரகாம் லிங்கன் கப்பல் மீது ஈரான் தாக்குதல்? – அமெரிக்கா மறுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies