நியூசிலாந்தில் மகள்களை கொன்று சூட்கேசில் அடைத்த பெண்ணுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்தின் ஆக்லாந்தைச் சேர்ந்த ஹக்கி யுங் லீ என்பவருக்கு யூனா ஜோ, மினு ஜோ என 2 மகள்கள் இருந்தனர்.
அவரது கணவர் 2018-ம் ஆண்டு மரணமடைந்தார். இதனால் மன அழுத்தத்தில் இருந்த அவர் ஜூசில் தூக்க மாத்திரை கலந்து அவர்களுக்குக் கொடுத்து விட்டுத் தானும் குடித்தார். காலையில் எழுந்து பார்த்தபோது இரு மகள்களும் உயிரிழந்தனர்.
ஆனால் ஹக்கி யுங்குக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. இதனால் போலீசுக்கு பயந்து ஒரு சூட்கேசில் தனது மகள்களின் உடல்களை அடைத்து வைத்தார்.
பின் அவர் அங்கிருந்து தென் கொரியா தப்பி ஓடினார். 2022-ல் அவரது வீட்டை மற்றொரு தம்பதி வாங்கிய பிறகே இச்சம்பவம் வெளியுலகுக்கு தெரிய வந்தது.
இதையடுத்து தென் கொரியா சென்று ஹக்கி யுங்கை கைது செய்த போலீசார் நியூசிலாந்துக்கு நாடு கடத்தினர்.
ஆக்லாந்து நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடந்தது. இந்நிலையில் குற்றச்சாட்டு உறுதியானதால் ஹக்கி யுங்-க்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
















