வடியாத மழைநீர் : கண்ணீர் வடிக்கும் விவசாயிகள்!
Jan 14, 2026, 04:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

வடியாத மழைநீர் : கண்ணீர் வடிக்கும் விவசாயிகள்!

Murugesan M by Murugesan M
Nov 27, 2025, 07:37 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும், வடிகால்கள் முறையாகத் தூர்வாரப்படாததால், சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்கள் நீரில் மூழ்கிச் சேதமடைந்துள்ளன. இதனால், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். இதுகுறித்து விவரிக்கிறது இந்தச் செய்தித்தொகுப்பு.

வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் தீவிரம் அடைந்ததை தொடர்ந்து டெல்டா மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளிலும் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் பல லட்சம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்ட சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்கள் முழுவதுமாக நீரில் மூழ்கிச் சேதமடைந்தன. தஞ்சை மாவட்டத்தில் 25 ஆயிரம் ஏக்கருக்கு மேல் சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் நீரில் மூழ்கிக் கடல்போல் காட்சியளிப்பதற்கு வடிகால்கள் முறையாகத் தூர்வாரப்படாததே காரணம் என விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

மேலும் ஏக்கர் ஒன்றுக்கு 30 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதேபோல் திருவாரூர் மாவட்டம் வேப்பந்தாங்குடி பகுதியில் 100 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் நீரில் மூழ்கி இருப்பதால், 45 ஆயிரம் நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த கோட்டூர் பகுதி விவசாயிகளும் மழையின் பாதிப்பில் இருந்து தப்பவில்லை. 500 ஏக்கர் பரப்பளவிலான நெற்பயிர்கள் சேதமடைந்திருப்பதால் செய்வதறியாது விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் கால்வாய் தூர்வாரும் பணி பெயரளவில் மட்டுமே நடைபெற்று வருவதாகவும், விவசாயத்தை விட்டே சென்று விடலாம் என்ற எண்ணம் தோன்றுவதகாவும் திருவாரூர் மாவட்டத்தின் கள்ளிக்குடி பகுதி விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

கலப்பால் பகுதியிலும் 300-க்கும் மேற்பட்ட ஏக்கரில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியிருப்பதால், தமிழக அரசு விவசாயிகளின் வேதனைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலிக்கிறது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்குத் தமிழக அரசு உடனடியாக ஏக்கருக்கு 50,000 ரூபாய் நிவாரணமாக அறிவிக்க வேண்டும் எனத் தமிழ்நாடு விவசாய அணி மாநில துணைத் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகளுக்கு அறிவித்த எந்த நிவாரணத் தொகையும் அவர்கள் கைக்கு வந்த சேராத நிலையில், இந்த ஆண்டாவது தமிழக அரசுச் செவி சாய்க்குமா? என்பதே டெல்டா மாவட்ட விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags: Undrained rainwater: Farmers shedding tearstn raintn agricultureகண்ணீர் வடிக்கும் விவசாயிகள்வடியாத மழைநீர்
ShareTweetSendShare
Previous Post

விண்வெளித்துறையில் இந்தியா ஆதிக்கம் செலுத்துகிறது : பிரதமர் மோடி பெருமிதம்!

Next Post

வங்கக்கடலில் உருவான டிட்வா புயல்!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies