வடியாத மழைநீர் : கண்ணீர் வடிக்கும் விவசாயிகள்!
Sep 12, 2026, 01:10 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

வடியாத மழைநீர் : கண்ணீர் வடிக்கும் விவசாயிகள்!

Murugesan M by Murugesan M
Nov 27, 2025, 07:37 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும், வடிகால்கள் முறையாகத் தூர்வாரப்படாததால், சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்கள் நீரில் மூழ்கிச் சேதமடைந்துள்ளன. இதனால், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். இதுகுறித்து விவரிக்கிறது இந்தச் செய்தித்தொகுப்பு.

வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் தீவிரம் அடைந்ததை தொடர்ந்து டெல்டா மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளிலும் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் பல லட்சம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்ட சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்கள் முழுவதுமாக நீரில் மூழ்கிச் சேதமடைந்தன. தஞ்சை மாவட்டத்தில் 25 ஆயிரம் ஏக்கருக்கு மேல் சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் நீரில் மூழ்கிக் கடல்போல் காட்சியளிப்பதற்கு வடிகால்கள் முறையாகத் தூர்வாரப்படாததே காரணம் என விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

மேலும் ஏக்கர் ஒன்றுக்கு 30 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதேபோல் திருவாரூர் மாவட்டம் வேப்பந்தாங்குடி பகுதியில் 100 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் நீரில் மூழ்கி இருப்பதால், 45 ஆயிரம் நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த கோட்டூர் பகுதி விவசாயிகளும் மழையின் பாதிப்பில் இருந்து தப்பவில்லை. 500 ஏக்கர் பரப்பளவிலான நெற்பயிர்கள் சேதமடைந்திருப்பதால் செய்வதறியாது விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் கால்வாய் தூர்வாரும் பணி பெயரளவில் மட்டுமே நடைபெற்று வருவதாகவும், விவசாயத்தை விட்டே சென்று விடலாம் என்ற எண்ணம் தோன்றுவதகாவும் திருவாரூர் மாவட்டத்தின் கள்ளிக்குடி பகுதி விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

கலப்பால் பகுதியிலும் 300-க்கும் மேற்பட்ட ஏக்கரில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியிருப்பதால், தமிழக அரசு விவசாயிகளின் வேதனைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலிக்கிறது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்குத் தமிழக அரசு உடனடியாக ஏக்கருக்கு 50,000 ரூபாய் நிவாரணமாக அறிவிக்க வேண்டும் எனத் தமிழ்நாடு விவசாய அணி மாநில துணைத் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகளுக்கு அறிவித்த எந்த நிவாரணத் தொகையும் அவர்கள் கைக்கு வந்த சேராத நிலையில், இந்த ஆண்டாவது தமிழக அரசுச் செவி சாய்க்குமா? என்பதே டெல்டா மாவட்ட விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags: Undrained rainwater: Farmers shedding tearstn raintn agricultureகண்ணீர் வடிக்கும் விவசாயிகள்வடியாத மழைநீர்
Share
Tweet
SendShare
Previous Post

விண்வெளித்துறையில் இந்தியா ஆதிக்கம் செலுத்துகிறது : பிரதமர் மோடி பெருமிதம்!

Next Post

வங்கக்கடலில் உருவான டிட்வா புயல்!

Related News

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies