வடியாத மழைநீர் : கண்ணீர் வடிக்கும் விவசாயிகள்!
Jul 28, 2026, 07:49 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

வடியாத மழைநீர் : கண்ணீர் வடிக்கும் விவசாயிகள்!

Murugesan M by Murugesan M
Nov 27, 2025, 07:37 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும், வடிகால்கள் முறையாகத் தூர்வாரப்படாததால், சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்கள் நீரில் மூழ்கிச் சேதமடைந்துள்ளன. இதனால், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். இதுகுறித்து விவரிக்கிறது இந்தச் செய்தித்தொகுப்பு.

வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் தீவிரம் அடைந்ததை தொடர்ந்து டெல்டா மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளிலும் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் பல லட்சம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்ட சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்கள் முழுவதுமாக நீரில் மூழ்கிச் சேதமடைந்தன. தஞ்சை மாவட்டத்தில் 25 ஆயிரம் ஏக்கருக்கு மேல் சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் நீரில் மூழ்கிக் கடல்போல் காட்சியளிப்பதற்கு வடிகால்கள் முறையாகத் தூர்வாரப்படாததே காரணம் என விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

மேலும் ஏக்கர் ஒன்றுக்கு 30 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதேபோல் திருவாரூர் மாவட்டம் வேப்பந்தாங்குடி பகுதியில் 100 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் நீரில் மூழ்கி இருப்பதால், 45 ஆயிரம் நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த கோட்டூர் பகுதி விவசாயிகளும் மழையின் பாதிப்பில் இருந்து தப்பவில்லை. 500 ஏக்கர் பரப்பளவிலான நெற்பயிர்கள் சேதமடைந்திருப்பதால் செய்வதறியாது விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் கால்வாய் தூர்வாரும் பணி பெயரளவில் மட்டுமே நடைபெற்று வருவதாகவும், விவசாயத்தை விட்டே சென்று விடலாம் என்ற எண்ணம் தோன்றுவதகாவும் திருவாரூர் மாவட்டத்தின் கள்ளிக்குடி பகுதி விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

கலப்பால் பகுதியிலும் 300-க்கும் மேற்பட்ட ஏக்கரில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியிருப்பதால், தமிழக அரசு விவசாயிகளின் வேதனைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலிக்கிறது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்குத் தமிழக அரசு உடனடியாக ஏக்கருக்கு 50,000 ரூபாய் நிவாரணமாக அறிவிக்க வேண்டும் எனத் தமிழ்நாடு விவசாய அணி மாநில துணைத் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகளுக்கு அறிவித்த எந்த நிவாரணத் தொகையும் அவர்கள் கைக்கு வந்த சேராத நிலையில், இந்த ஆண்டாவது தமிழக அரசுச் செவி சாய்க்குமா? என்பதே டெல்டா மாவட்ட விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags: tn raintn agricultureகண்ணீர் வடிக்கும் விவசாயிகள்வடியாத மழைநீர்Undrained rainwater: Farmers shedding tears
ShareTweetSendShare
Previous Post

விண்வெளித்துறையில் இந்தியா ஆதிக்கம் செலுத்துகிறது : பிரதமர் மோடி பெருமிதம்!

Next Post

வங்கக்கடலில் உருவான டிட்வா புயல்!

Related News

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கு – படக்குழு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

“ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்”, “ஜெய் ஸ்ரீராம்” : வித்தியாசம் தெரியாத அமைச்சர் வன்னியரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குற்றப்பின்னணி கொண்ட 1000-க்கும் மேற்பட்டோர் டெல்லி போராட்டத்தில் பங்கேற்பு – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

முல்லை பெரியாறில் கழிவு நீர் கலப்பு – ஜெகநாத் மிஸ்ரா குற்றச்சாட்டு!

சவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்!

ஆரோவில் சர்வதேச மையத்தில் கலாச்சார பரிமாற்ற விழா – தாய்லாந்து தூதரக அதிகாரிகளுக்கு உற்சாக வரவேற்பு!

பிற மாநிலங்களுக்கு கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தடை – தமிழக அரசு உத்தரவு!

சமூக வலைதளங்களில் அவதூறு; மேயர் பிரியா புகார்

தவெக அரசின் அரசாணை ரத்து; உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies