டெல்லி கார் குண்டுவெடிப்பு வழக்கில் தன்னுடன் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஷாஹீன் ஷாஹித் தனது காதலி அல்ல, மனைவி என முசம்மில் அகமது, விசாரணை அமைப்புகளிடம் தெரிவித்துள்ளார்.
டெல்லி செங்கோட்டையில் கடந்த 10ம் தேதி நிகழ்ந்த கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 15 பேர் உயிரிழந்தனர். நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கை என்ஐஏ விசாரித்து வருகிறது.
இந்த வழக்கில், அரியானா அல் பலா பல்கலைக் கழகத்தில் மருத்துவ பேராசிரியராக பணியாற்றிய முசம்மில் ஷகீல் கனாயி, அனந்த்நாக்கை சேர்ந்த மருத்துவர் ஹதில் அகமது, லக்னோவை சேர்ந்த பெண் மருத்துவர் ஷாஹீன் ஷாஹித் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவ்வழக்கில் தன்னுடன் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஷாஹீன் ஷாஹித் தனது காதலி அல்ல, மனைவி என விசாரணை அமைப்புகளிடம் முசம்மில் தெரிவித்துள்ளார். இருவரும் முறையாக கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டதாகவும் முசம்மில் தெரிவித்துள்ளார்.
















