பாரதத்தையும், சனாதன தர்மத்தையும் பிரிக்க முடியாது என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
சென்னை தி.நகரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ண கான சபா அரங்கில் நாமசங்கீர்த்தன வெள்ளி விழாவை ஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கி வைத்தார்.
இதனைதொடர்ந்து பேசிய அவர், சனாதன தர்மத்தில் இருந்துதான் பாரதம் தோன்றியதாக கூறினார். பாரதத்தை ஒற்றுமையுடன் வைத்திருக்க, பக்தி வழிவகை செய்வதாக குறிப்பிட்ட ஆளுநர், கடினமான நேரங்களில் பக்தி மிக முக்கிய பங்காற்றியுள்ளதாகவும் தெரிவித்தார்.
















