திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த வளையாம்பட்டில் புதிதாகத் திறக்கப்பட்ட டாஸ்மாக் மதுபானக்கடையை மூடக்கோரி பொதுமக்கள், அரசியல் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதிதாகத் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடை அருகே குடியிருப்புகள், பள்ளிகள் உள்ளதாகவும் அதனால் டாஸ்மாக் கடையை உடனே மூட வேண்டுமெனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.
















