தாமிரபரணி - நம்பியாறு இணைப்புத் திட்ட தடுப்பணையில் விரிசல் - கிராமங்கள் நீரில் மூழ்கும் அபாயம்!
Jan 14, 2026, 04:34 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தாமிரபரணி – நம்பியாறு இணைப்புத் திட்ட தடுப்பணையில் விரிசல் – கிராமங்கள் நீரில் மூழ்கும் அபாயம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Nov 30, 2025, 07:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தாமிரபரணி – நம்பியாறு இணைப்புத் திட்ட தடுப்பணையில் விரிசல் ஏற்பட்டுள்ளதால், பல கிராமங்கள் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம்.

தென் மாவட்டங்களின் வறண்ட பகுதிகளுக்கு வளம் சேர்க்கும் முக்கியத்துவம் வாய்ந்த திட்டமாக தாமிரபரணி – கருமேனியாறு – நம்பியாறு இணைப்புத் திட்டம் விளங்குகிறது. இந்த திட்டத்தின் மூலம் பெறப்படும் உபரிநீர் வீணாக கடலில் கலப்பதாக விவசாயிகள் குற்றம்சாட்டி வந்தனர். இதனையடுத்து, உபரிநீர் செல்லும் வழியில் தமிழாக்குறிச்சி பகுதியில் தடுப்பணை கட்ட முடிவு செய்யப்பட்டது.

இதனை கட்டி முடிக்க ஆயிரத்து 60 கோடி ரூபாயாகும் என மதிப்பிடப்பட்ட நிலையில், மத்திய அரசின் ஜல்சக்தி அமைச்சகம் 872 கோடி ரூபாய் நிதி வழங்கியது. அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் முதலமைச்சர் ஸ்டாலின் இந்த தடுப்பணையை திறந்து வைத்தார்.

ஆனால், தமிழாக்குறிச்சி தடுப்பணை கட்டப்பட்டு ஓராண்டுகூட முடிவடையாத நிலையில், அதில் தற்போது விரிசல் ஏற்பட்டுள்ளது அப்பகுதி மக்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழாக்குறிச்சி தடுப்பணையானது தாமிரபரணியின் உபரி நீருடன் சேர்த்து, பச்சையாறு, கோரையாறு போன்ற பகுதிகளில் இருந்து வரும் காட்டாற்று வெள்ளத்தையும் தாங்க வேண்டிய நிலையில் உள்ளது. இந்த சூழலில் தடுப்பணையின் விரிசல் அதிகரிக்கும் பட்சத்தில் அதிகப்படியான வெள்ளம் வெளியேறி, 5 கிராமங்களை மூழ்கடிக்கும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

மேலும், 5 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களும் தண்ணீரில் மூழ்கக்கூடும் என்பதால் விவசாயிகளும் கலக்கத்தில் உள்ளனர். மத்திய அரசு 90 சதவீத நிதியை வழங்கியுள்ள போதிலும், பொதுப்பணித்துறையினர் அலட்சியத்துடன் கட்டுமான பணிகளில் ஈடுபட்டதால்தான் தடுப்பணையில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இந்த விரிசல் மேலும் பெரிதாகி உடைப்பு ஏற்படுவதற்கு முன்பாக அதனை சரி செய்ய வேண்டும் என பொதுமக்களும், விவசாயிகளும் வலியுறுத்தியுள்ளனர். மக்களின் உயிருடன் விளையாடும் வகையில் இதுபோன்று தரமற்ற முறையில் கட்டுமானங்களை அமைக்க கூடாது எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Tags: Thamirabarani-Nambiar Link ProjectThamirabarani-Nambiar Link Project damcrack in damsouthern districts.Tamilakurichi
ShareTweetSendShare
Previous Post

பக்தியால் அனைவரும் இணைக்கப்பட்டுள்ளனர் – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்

Next Post

ஊத்தங்கரையில் 3 நடுகற்கோயில் கண்டுபிடிப்பு – தொல்லியல் துறையினர் ஆய்வு!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies