தாமிரபரணி - நம்பியாறு இணைப்புத் திட்ட தடுப்பணையில் விரிசல் - கிராமங்கள் நீரில் மூழ்கும் அபாயம்!
Sep 14, 2026, 04:14 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தாமிரபரணி – நம்பியாறு இணைப்புத் திட்ட தடுப்பணையில் விரிசல் – கிராமங்கள் நீரில் மூழ்கும் அபாயம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Nov 30, 2025, 07:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தாமிரபரணி – நம்பியாறு இணைப்புத் திட்ட தடுப்பணையில் விரிசல் ஏற்பட்டுள்ளதால், பல கிராமங்கள் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம்.

தென் மாவட்டங்களின் வறண்ட பகுதிகளுக்கு வளம் சேர்க்கும் முக்கியத்துவம் வாய்ந்த திட்டமாக தாமிரபரணி – கருமேனியாறு – நம்பியாறு இணைப்புத் திட்டம் விளங்குகிறது. இந்த திட்டத்தின் மூலம் பெறப்படும் உபரிநீர் வீணாக கடலில் கலப்பதாக விவசாயிகள் குற்றம்சாட்டி வந்தனர். இதனையடுத்து, உபரிநீர் செல்லும் வழியில் தமிழாக்குறிச்சி பகுதியில் தடுப்பணை கட்ட முடிவு செய்யப்பட்டது.

இதனை கட்டி முடிக்க ஆயிரத்து 60 கோடி ரூபாயாகும் என மதிப்பிடப்பட்ட நிலையில், மத்திய அரசின் ஜல்சக்தி அமைச்சகம் 872 கோடி ரூபாய் நிதி வழங்கியது. அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் முதலமைச்சர் ஸ்டாலின் இந்த தடுப்பணையை திறந்து வைத்தார்.

ஆனால், தமிழாக்குறிச்சி தடுப்பணை கட்டப்பட்டு ஓராண்டுகூட முடிவடையாத நிலையில், அதில் தற்போது விரிசல் ஏற்பட்டுள்ளது அப்பகுதி மக்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழாக்குறிச்சி தடுப்பணையானது தாமிரபரணியின் உபரி நீருடன் சேர்த்து, பச்சையாறு, கோரையாறு போன்ற பகுதிகளில் இருந்து வரும் காட்டாற்று வெள்ளத்தையும் தாங்க வேண்டிய நிலையில் உள்ளது. இந்த சூழலில் தடுப்பணையின் விரிசல் அதிகரிக்கும் பட்சத்தில் அதிகப்படியான வெள்ளம் வெளியேறி, 5 கிராமங்களை மூழ்கடிக்கும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

மேலும், 5 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களும் தண்ணீரில் மூழ்கக்கூடும் என்பதால் விவசாயிகளும் கலக்கத்தில் உள்ளனர். மத்திய அரசு 90 சதவீத நிதியை வழங்கியுள்ள போதிலும், பொதுப்பணித்துறையினர் அலட்சியத்துடன் கட்டுமான பணிகளில் ஈடுபட்டதால்தான் தடுப்பணையில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இந்த விரிசல் மேலும் பெரிதாகி உடைப்பு ஏற்படுவதற்கு முன்பாக அதனை சரி செய்ய வேண்டும் என பொதுமக்களும், விவசாயிகளும் வலியுறுத்தியுள்ளனர். மக்களின் உயிருடன் விளையாடும் வகையில் இதுபோன்று தரமற்ற முறையில் கட்டுமானங்களை அமைக்க கூடாது எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Tags: southern districts.TamilakurichiThamirabarani-Nambiar Link ProjectThamirabarani-Nambiar Link Project damcrack in dam
Share
Tweet
SendShare
Previous Post

பக்தியால் அனைவரும் இணைக்கப்பட்டுள்ளனர் – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்

Next Post

ஊத்தங்கரையில் 3 நடுகற்கோயில் கண்டுபிடிப்பு – தொல்லியல் துறையினர் ஆய்வு!

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies