தாமிரபரணி - நம்பியாறு இணைப்புத் திட்ட தடுப்பணையில் விரிசல் - கிராமங்கள் நீரில் மூழ்கும் அபாயம்!
Jun 15, 2026, 03:10 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தாமிரபரணி – நம்பியாறு இணைப்புத் திட்ட தடுப்பணையில் விரிசல் – கிராமங்கள் நீரில் மூழ்கும் அபாயம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Nov 30, 2025, 07:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தாமிரபரணி – நம்பியாறு இணைப்புத் திட்ட தடுப்பணையில் விரிசல் ஏற்பட்டுள்ளதால், பல கிராமங்கள் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம்.

தென் மாவட்டங்களின் வறண்ட பகுதிகளுக்கு வளம் சேர்க்கும் முக்கியத்துவம் வாய்ந்த திட்டமாக தாமிரபரணி – கருமேனியாறு – நம்பியாறு இணைப்புத் திட்டம் விளங்குகிறது. இந்த திட்டத்தின் மூலம் பெறப்படும் உபரிநீர் வீணாக கடலில் கலப்பதாக விவசாயிகள் குற்றம்சாட்டி வந்தனர். இதனையடுத்து, உபரிநீர் செல்லும் வழியில் தமிழாக்குறிச்சி பகுதியில் தடுப்பணை கட்ட முடிவு செய்யப்பட்டது.

இதனை கட்டி முடிக்க ஆயிரத்து 60 கோடி ரூபாயாகும் என மதிப்பிடப்பட்ட நிலையில், மத்திய அரசின் ஜல்சக்தி அமைச்சகம் 872 கோடி ரூபாய் நிதி வழங்கியது. அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் முதலமைச்சர் ஸ்டாலின் இந்த தடுப்பணையை திறந்து வைத்தார்.

ஆனால், தமிழாக்குறிச்சி தடுப்பணை கட்டப்பட்டு ஓராண்டுகூட முடிவடையாத நிலையில், அதில் தற்போது விரிசல் ஏற்பட்டுள்ளது அப்பகுதி மக்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழாக்குறிச்சி தடுப்பணையானது தாமிரபரணியின் உபரி நீருடன் சேர்த்து, பச்சையாறு, கோரையாறு போன்ற பகுதிகளில் இருந்து வரும் காட்டாற்று வெள்ளத்தையும் தாங்க வேண்டிய நிலையில் உள்ளது. இந்த சூழலில் தடுப்பணையின் விரிசல் அதிகரிக்கும் பட்சத்தில் அதிகப்படியான வெள்ளம் வெளியேறி, 5 கிராமங்களை மூழ்கடிக்கும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

மேலும், 5 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களும் தண்ணீரில் மூழ்கக்கூடும் என்பதால் விவசாயிகளும் கலக்கத்தில் உள்ளனர். மத்திய அரசு 90 சதவீத நிதியை வழங்கியுள்ள போதிலும், பொதுப்பணித்துறையினர் அலட்சியத்துடன் கட்டுமான பணிகளில் ஈடுபட்டதால்தான் தடுப்பணையில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இந்த விரிசல் மேலும் பெரிதாகி உடைப்பு ஏற்படுவதற்கு முன்பாக அதனை சரி செய்ய வேண்டும் என பொதுமக்களும், விவசாயிகளும் வலியுறுத்தியுள்ளனர். மக்களின் உயிருடன் விளையாடும் வகையில் இதுபோன்று தரமற்ற முறையில் கட்டுமானங்களை அமைக்க கூடாது எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Tags: crack in damsouthern districts.TamilakurichiThamirabarani-Nambiar Link ProjectThamirabarani-Nambiar Link Project dam
ShareTweetSendShare
Previous Post

பக்தியால் அனைவரும் இணைக்கப்பட்டுள்ளனர் – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்

Next Post

ஊத்தங்கரையில் 3 நடுகற்கோயில் கண்டுபிடிப்பு – தொல்லியல் துறையினர் ஆய்வு!

Related News

முதலமைச்சர் விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு; திங்களன்று விசாரணை

ஏ.ஐ தொழில்நுட்பத்துறைக்கு வளமான எதிர்காலம்; பிரான்சில் பிரதமர் மோடி பேச்சு

பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் சோதனை வெற்றி : DRDO அசத்தல் சாதனை – சிறப்பு தொகுப்பு!

பனிக்கட்டி சூழ்ந்த ஏரியில் மூழ்கிய சிறுமியை காப்பாற்றிய இந்திய தொழிலாளி : கெளரவ குடிமகன் அந்தஸ்து வழங்கி கவுரவித்த ருமேனியா – சிறப்பு தொகுப்பு!

கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு பாராட்டு – காலில் விழுந்து ஆசி பெற்ற தவெக எம்எல்ஏ!

பஞ்சாப் எல்லையில் தீவிர கண்காணிப்பு : ட்ரோன்கள் மூலம் போதைபொருள், ஆயுத கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies