ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே திருமணமான சில நிமிடங்களில் மணமகன் மர்மமான முறையில் குளத்தில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரும்பாக்கம் கிராமத்தை சேர்ந்த அஜித்குமார் என்பவர், உளுந்தூர்பேட்டை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரை கடந்த 5 வருடமாகக் காதலித்து வந்துள்ளார்.
இந்நிலையில், இரு வீட்டார் சம்மதத்துடன் இவர்களின் திருமணம் அரும்பாக்கம் குளக்கரை ரேணுகாம்பாள் கோயிலில் நடைபெற்றது.
திருமணம் நடந்த சில நிமிடங்களில் அஜித்குமார் காணாமல் போனதையடுத்து, உறவினர்கள் அவரைத் தீவிரமாகத் தேடியுள்ளனர்.
இதனையடுத்து, அஜித்குமார் அருகிலிருந்த குளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். தகவலறிந்து சென்ற போலீசார் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம்குறித்து வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
















