டெல்லி கார் குண்டு வெடிப்புச் சம்பவம் தொடர்பாக, ஜம்மு-காஷ்மீரில் 8 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
டெல்லி செங்கோட்டை அருகே கடந்த 10ம் தேதி கார் குண்டு வெடித்ததில் 15 பேர் உயிரிழந்தனர்.
நாட்டையே உலுக்கிய இந்தப் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் இருப்பவர்களைக் கண்டுபிடிக்க என்ஐஏ அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் காஷ்மீரில் 8 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
















