பாகிஸ்தானின் அணு ஆயுதங்களை இயக்கும் சுவிட்ச், தற்போது அசிம் முனீரின் கட்டுப்பாட்டிற்கு மாறியுள்ளது.
பாகிஸ்தான் அரசு, நாட்டின் முதல் பாதுகாப்புப் படைகளின் தலைவராக ஃபீல்ட் மார்ஷல் அசிம் முனீரை நியமித்துள்ளது.
அதேநேரம் ராணுவத் தலைவராகவும் அவர் நீடிப்பார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அசிம் முனீர் இந்தச் சக்திவாய்ந்த பொறுப்பில் அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீடிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய மூன்று பிரிவுகளின் தலைமைப் பொறுப்பை மட்டுமல்லாமல் அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணை அமைப்புகளை நிர்வகிக்கும் அதிகாரமும் அசிம் முனிரிடம் தற்போது சென்றுள்ளது.
அதேபோல் அவருக்கு வழங்கப்பட்ட இந்தப் புதிய பதவியால் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் அதிகாரங்கள் குறைந்துள்ளன. மேலும், பிரதமருக்கு இணையான சட்ட பாதுகாப்பையும் பெறுகிறார் அசிம் முனீர்.
















