திருப்பரங்குன்றத்தில் 4-வது நாளாகப் பக்தர்கள் மலைமீது ஏறிச் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபமேற்ற அண்மையில் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு பிறப்பித்தது.
இருப்பினும், காவல்துறை அனுமதி மறுத்ததால் தீபத்தூணில் தீபம் ஏற்றப்படவில்லை. இதையடுத்து திருப்பரங்குன்றம் மலை மீது ஏறிச் சுவாமி தரிசனம் செய்யக் கடந்த 3 நாட்களாக அனுமதி மறுக்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியான இன்றும் மலையில் உள்ள காசி விஸ்வநாதர் கோவில், சிக்கந்தர் தர்காவிற்கு செல்லப் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும், அப்பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.
















