மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் நடைபெற்ற காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் முன்னாள் எம்பியின் பேச்சை கேட்காமல் நிர்வாகிகள் பேசிக் கொண்டிருந்ததால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
அலங்காநல்லூரில் சோழவந்தான் தொகுதி சார்பாகக் காங்கிரஸ் அமைப்பு சீரமைப்பு இயக்கக் கூட்டம் நடைபெற்றது.
இதில் முன்னாள் எம்பிக்கள் விஸ்வநாதன் மற்றும் சுதர்சன் நாச்சியப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பெரும்பாலும் வயதான பெண்கள் மற்றும் ஆண்கள் எனக் கலந்து கொண்ட நிலையில், நற்காலிகள் காலியாக இருந்ததால் எம்பிக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
அதுமட்டுமின்றி முன்னாள் எம்.பி சுதர்சன் நாச்சியப்பன் பேசிய போது மைக் சரியாக வேலை செய்யாததால், அங்கிருந்த நிர்வாகிகள் அவர்களுக்குள் பேசிக்கொண்டு இருந்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, முன்னாள் மத்திய அமைச்சர் அருண் யாதவ் ஜி ஆங்கிலத்தில் வெகுநேரம் உரையாற்றியபோது, பெரியோர்கள் மற்றும் மூதாட்டிகள் எதுவும் புரியாமல் சிரித்துக் பேசிக் கொண்டிருந்ததால் சலசலப்பு ஏற்பட்டது.
















