தமிழ் ஜனம் செய்தி எதிரொலியால் கோவையில் உள்ள செம்மொழி பூங்கா நாளை முதல் பொதுமக்கள் பார்வையிட திறந்து வைக்கப்படும் என அரசு அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
கோவை மாவட்டம், காந்திபுரத்தில் உள்ள சிறைத்துறை மைதானத்தில் 208 கோடி ரூபாய் செலவில் செம்மொழிப் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. 45 ஏக்கர் பரப்பளவில் நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த பூங்காவை கடந்த மாதம் 25ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இருப்பினும், மக்கள் வரிப்பணத்தில் அமையப்பெற்ற செம்மொழி பூங்கா அவசர கதியில் திறக்கப்பட்டதால் பொதுமக்கள் பார்வையிட அனுமதி வழங்கவில்லை என விமர்சனங்கள் எழுந்தன.
இது தொடர்பான செய்தி தொகுப்பு தமிழ் ஜனம் தொலைக்காட்சியில் வெளியானது. இதன் எதிரொலியாக, செம்மொழி பூங்கா நாளை முதல் பொதுமக்கள் பார்வையிட திறந்து வைக்கப்படும் என அரசு அதிகாரிகள்
தெரிவித்துள்ளனர்.
















