தாய்லாந்தில் பதுங்கிய லுத்ரா சகோதரர்கள் - இன்டர்போல் உதவியை நாடிய கோவா போலீஸ்!
Jan 14, 2026, 07:37 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

தாய்லாந்தில் பதுங்கிய லுத்ரா சகோதரர்கள் – இன்டர்போல் உதவியை நாடிய கோவா போலீஸ்!

Murugesan M by Murugesan M
Dec 11, 2025, 07:08 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தாய்லாந்து தப்பியோடிய கோவா கேளிக்கை விடுதி உரிமையாளர்களை, இன்டர்போல் உதவியுடன் அம்மாநில போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர். இதுகுறித்து விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தித்தொகுப்பில்.

நாட்டையே உலுக்கிய கோவா கேளிக்கை விடுதி தீ விபத்து சம்பவத்தில், அதன் உரிமையாளர்கள் நாட்டை விட்டுத் தப்பியோடிய நிலையில், அவர்கள் எப்போது கைது செய்யப்படுவர் என்ற குரல் பல்வேறு தரப்பில் இருந்தும் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக இன்டர்போல் உதவியை நாடியுள்ள கோவா போலீசார், தாய்லாந்தில் பதுங்கியுள்ள லுத்ரா சகோதரர்களைப் பிடிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

கோவா மாநிலத்தின் அர்போரா பகுதியில் செயல்பட்டு வந்த Birch by Romeo Lane எனப்படும் இரவு கேளிக்கை விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில், சமையல் ஊழியர்கள், சுற்றுலா பயணிகள் என 25 பேர் உயிரிழக்க, விடுதியின் தலைமை மேலாளர், பார் மேலாளர் என 5 பேரை போலீசார் கைது செய்தனர். ஆனால், கேளிக்கை விடுதி நடத்தி வந்த சவுரப் – கௌரவ் லுத்ரா சகோதரர்கள், விபத்து நடந்த சில மணி நேரங்களிலேயே நாட்டை விட்டுத் தப்பி தாய்லாந்தில் தஞ்சம் புகுந்தனர்.

அதாவது, நள்ளிரவு 12.04 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாக FIR பதியப்பட்டுள்ள நிலையில், அன்று காலை 5.30 மணியளவில் சவுரப் – கௌரவ் லூத்ரா சகோதரர்கள் தாய்லாந்து தப்பியது தெரியவந்துள்ளது. டெல்லியில் இருந்து இண்டிகோ விமானம் மூலம் தாய்லாந்தின் புகெட்டுக்கு தப்பியோடிய அவர்கள், அங்கு இன்டர்போல் கண்ணில் சிக்காதவாறு தலைமறைவாக இருப்பதாகத் தெரிகிறது. சவுரப் – கௌரவ் லுத்ரா சகோதரர்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிப்பதற்கு முன்னரே, அவர்கள் தாய்லாந்து சென்றதால், இருவரையும் கைது செய்வதில் தாமதம் நீடிக்கிறது. டெல்லியில் உள்ள ஒரு முகவரியை வைத்தே, 42 நிறுவனங்களை நடத்தியதும், போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ள நிலையில், அதுவும் தற்போது சவுரப் – கௌரவ் லுத்ரா சகோதரர்களுக்குச் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இதையெல்லாம் கருத்தில் கொண்டு அவர்கள் தாக்கல் செய்த முன்ஜாமின் மனுவை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

தற்போதைய சூழலில் கேளிக்கை விடுதி செயல்பட்டு வந்த கட்டடத்தின் உரிமையாளர் சுரிந்தர் குமார் கோஷ்லாவும், போலீசாரின் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டிருக்கிறார். சுரிந்தர் குமார் கோஷ்லா பிரிட்டன் குடியுரிமை பெற்றிருப்பதால், அவர் வெளிநாடுகளுக்கு சென்றுவிட கூடாது என்பதற்காக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டிருப்பதாகக் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சவுரப் – கௌரவ் லுத்ரா சகோதரர்களை கைது செய்ய மத்திய புலனாய்வு அமைப்புகள் மற்றும் இன்டர்போல் உதவியை நாடியுள்ளதால், அவர்கள் இருவரும் நிச்சயம் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர் எனக் கோவா டிஐஜி வர்ஷா சர்மா தெரிவித்துள்ளார். கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த் கூறுகையில், 25 பேரின் உயிரிழப்புக்கு நிச்சயம் தனது அரசு நியாயம் தேடி தரும் எனத் தெரிவித்துள்ளார். சவுரப் – கௌரவ் லூத்ரா சகோதரர்களை கைது செய்வதில் தாமதம் ஏற்பட்டால், கோவா போலீசார் நேரடியாக தாய்லாந்து செல்வதற்கும் வழிவகை செய்யப்படும் என உறுதிப்பட கூறியிருக்கிறார்.

Tags: Luthra brothers hiding in Thailand - Goa Police seeks Interpol's help
ShareTweetSendShare
Previous Post

வர்த்தகத்திற்கு வெளிப்படைத்தன்மை, நம்பிக்கை மிகவும் அவசியம் – பியூஷ் கோயல்

Next Post

இந்தியாவில் 5 ஆண்டுகளில் ரூ.3.50 லட்சம் கோடி முதலீடு – அமேசான் அதிரடி அறிவிப்பு!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies