இந்தியாவில் 5 ஆண்டுகளில் ரூ.3.50 லட்சம் கோடி முதலீடு - அமேசான் அதிரடி அறிவிப்பு!
Sep 13, 2026, 01:03 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

இந்தியாவில் 5 ஆண்டுகளில் ரூ.3.50 லட்சம் கோடி முதலீடு – அமேசான் அதிரடி அறிவிப்பு!

Murugesan M by Murugesan M
Dec 11, 2025, 07:25 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்தியாவில் அடுத்த ஐந்து ஆண்டுக்குள் 3 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்யப்போவதாக அமேசான் அறிவித்துள்ளது இவை, இந்தியாவின் AI துறை மற்றும் டிஜிட்டல் பொருளாதாவளர்ச்சிக்குப் பெரும்ம் உந்துதலாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறதுஅதுபற்றியய ஒரு செய்தி தொகுப்பு.

அமெரிக்க தொழில் நுட்ப நிறுவனங்கள் அமெரிக்காவிலேயே முதலீடு செய்ய வேண்டும் என்று அதிபர் ட்ரம்ப் வேண்டுகோள்வைத்தபோதிலும், உலகளாவிய முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்யத் தொடங்கியுள்ளன. அமெரிக்காவின் பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனமான அமேசான், e-commerce, cloud computing,Digital streaming, AI எனப் துறைகளில் வெற்றிகரமாகச் செயல்பட்டுவருகிறது.

“Everything Store” என்ற அடையாளத்துடன் அனைத்து பொருட்களையும் விற்பனை செய்து வரும் அமேசான் நேரடியாகப் பொருட்களை விற்பனை செய்வதோடு, மற்ற விற்பனையாளர்களையும் தங்கள் தளத்தில் விற்பனை செய்ய அனுமதிக்கிறது. அமேசான் மூலம் இந்தியாவில் உள்ள சிறு மற்றும் குறும் விற்பனையாளர்கள் உலகம் முழுவதும் பொருட்களை ஏற்றுமதி செய்து வருகின்றனர். இந்திய உற்பத்தியாளர்கள் உலக சந்தையில் நுழைவதற்கான கருவியாக அமேசான் உள்ளது. சுமார் 1.2 கோடிக்கும் மேற்பட்ட இந்திய சிறு வணிகங்கள் அமேசான் மூலம் டிஜிட்டல் மயமாகி உள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் இருந்துஅமேசான் மூலம் 20 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புக்கு ஏற்றுமதி நடந்துள்ளது.கடந்த ஆண்டு மட்டும் சுமார் 3 லட்சம் நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளை அமேசான் உருவாக்கியுள்ளது. அமேசான் ஏற்கனவே இந்தியாவில் 11 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்துள்ளது. 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் பிரதமர் மோடியைச் சந்தித்த அமேசான் தலைமை நிர்வாக அதிகாரி ஆண்டி ஜாஸ்ஸி, இந்தியாவின் டிஜிட்டல் வளர்ச்சியில் அமேசான் நீண்டகால முதலீடுகளை செய்யும் என்று உறுதியளித்திருந்தார்.

அமேசானின் மூத்த துணைத் தலைவர் அமித் அகர்வால், டிஜிட்டல் இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் அமேசானும் முக்கிய பங்கு வகிக்க விரும்புவதாகவும், MADE IN INDIA பொருட்களை உலக சந்தைகளுக்கு கொண்டு செல்வதில் தொடர்ந்து பணியாற்றி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

அதற்காக, 2030க்குள் 35 பில்லியன் அமெரிக்க டாலர், அதாவது 3 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாயை இந்தியாவில் முதலீடு செய்ய உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இதனால், ஒரு லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும், 15 மில்லியன் சிறு வணிகங்களுக்கு AI தொழில்நுட்பத்தைக் கொண்டு சேர்க்கும் என்றும், நாட்டின் இ-காமர்ஸ் ஏற்றுமதி சுமார் 80 பில்லியன் டாலராக உயரும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் நாடு முழுவதும் சிறு தொழில்கள் மற்றும் மாணவர்களுக்கான செயற்கை நுண்ணறிவு (AI) திட்டங்களையும் அமேசான் செயல்படுத்த உள்ளதாக கூறியுள்ளார். இந்த முதலீட்டு செயல்திட்டத்தில், AI பாடத்திட்டங்கள், செயல்முறை திட்டங்கள், ஆசிரியர் பயிற்சிகள், தொழில் நுட்பங்கள் என பள்ளி மாணவர்களுக்கான AI கற்றல் முயற்சிகளையும் அமேசான் கொண்டுவர திட்டமிட்டுள்ளது.

ஃப்ளிப்கார்ட், பிளிங்கிட், ஸ்விக்கியின் இன்ஸ்டாமார்ட் மற்றும் ஜெப்டோ போன்ற மற்ற நிறுவனங்களுடனான வணிகப் போட்டி அதிகரித்து வரும் நிலையில், தனது வணிக செயல்பாடுகள் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் வளங்களை விரிவாக்க சுமார் 233 மில்லியன் டாலர் முதலீடு செய்யும் திட்டத்தையும் அமேசான் நிறுவனம் அறிவித்துள்ளது.

Tags: IndiaamazonInvestment of Rs 3.50 lakh crore in India in 5 years - Amazon's big announcement
Share
Tweet
SendShare
Previous Post

தாய்லாந்தில் பதுங்கிய லுத்ரா சகோதரர்கள் – இன்டர்போல் உதவியை நாடிய கோவா போலீஸ்!

Next Post

முன்னணி நிறுவனங்களின் முதல் சாய்ஸ் : முதலீடுகளை வாரிக்குவிக்கும் இந்தியா!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies