அந்தமான் நிகோபார் தீவில் சுதந்திர போராட்ட வீரர் வீர சாவர்க்கரின் உருவச் சிலை திறக்கப்பட்டுள்ளது.
தெற்கு அந்தமான் மாவட்டத்தின் பியோத்னாபாத் நகரத்தில் உள்ள பூங்காவில் வீர சாவர்க்கரின் சிலையை RSS தலைவர் மோகன் பகவத் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் திறந்து வைத்தனர்.
பின்னர், அங்கு நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அமித்ஷா, சாவர்க்கரின் சமூக சீர்திருத்தப் பணிகளுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று வருத்தம் தெரிவித்தார். குறிப்பாக, தீண்டாமையை ஒழிக்க அவர் எடுத்த முயற்சிகள் உரிய அங்கீகாரம் பெறவில்லை எனக்கூறிய அமித்ஷா, இந்து சமூகத்தில் நிலவிய தீமைகளுக்கு எதிராக சாவர்க்கர் தைரியமாகப் போராடியதாகவும் தெரிவித்தார்.
மேலும், மோகன் பகவத்தின் கரங்களால் சாவர்க்கரின் சிலை திறக்கப்பட்டது குறித்தும் அமித்ஷா தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
















