சீனாவில் மக்கள் தொகையை உயர்த்தும் நோக்கத்துடன், கருத்தடை மருந்துகள் மற்றும் கருத்தடை சாதனங்களுக்குக் கூடுதல் வரி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 1980 முதல் 2015ம் ஆண்டு வரை ஒரு குழந்தை போதும் என்ற கொள்கையை சீன அரசு பின்பற்றி வந்தது.
தற்போது அங்கு மக்கள் தொகை குறைந்து வருவதால் 3 குழந்தைகள்வரை பெற்றுக்கொள்ள அந்நாட்டு மக்களை அரசு ஊக்குவித்து வருகிறது.
இதனால் கருத்தடை சாதனங்களின் விலையை உயர்த்தினால், பிறப்பு விகிதத்தை அதிகரிக்கலாம் என அந்நாட்டு அரசு நம்புகிறது.
அதன்படி, வரும் ஜனவரி 1ம் தேதி முதல் கருத்தடை மாத்திரைகள், ஆணுறை உள்ளிட்ட கருத்தடை சாதனங்கள் வரி விலக்கு பட்டியலில் இருந்து நீக்கப்படுகின்றன. மேலும், இவை மீது 13 சதவீதம் மதிப்பு கூட்டு வரியும் விதிக்கப்பட உள்ளது.
















